Vikatan

சுற்றுச் சூழலியலை காக்க 20 வழிகள்...! #WhereIsMyGreenWorld

சுற்றுச் சூழலியலை காக்க  20 வழிகள்...! #WhereIsMyGreenWorld

ம னிதன் வாழ்வதற்கு, அவன் வாழ்கிற சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருப்பதும் மிக முக்கியம். ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உள்ள பூமியையும், அளவற்ற இயற்கை வளத்தையும் விட்டுச் செல்வதுதான்  நமக்குப் பிறகு வரும் சந்ததிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய கைமாறு. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைக் காக்கும் விஷயத்தில் அரசாங்கம் உடனடியாகக் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன...?

தனது ஆலோசனைகளைச் சொல்கிறார்  சூழலியல் களச் செயற்பாட்டாளார் மற்றும் எழுத்தாளர் நக்கீரன்... 1. தமிழர்கள் நிலங்களின் பண்புகளுக்கு ஏற்ப அவற்றை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை... என்று ஐந்து பகுதிகளாகப் பிரித்தார்கள். இதுபோன்ற தொலைநோக்கு பார்வை வேறு எந்த இனத்திலும் கிடையாது. தமிழ்நாட்டின் நிலம் அனைத்தும் பாலையாக மாறிக்கொண்டுவருவதுதான் இப்போதைக்கு நாம் சந்திக்கும் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்னை. இதைத் தடுத்து நிறுத்த அரசாங்கம் உடனடியாகத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

சுற்றுச் சூழலியலை காக்க  20 வழிகள்...! #WhereIsMyGreenWorld

2. குறிஞ்சி நிலமான மலைப்பகுதிகளில் நம் முன்னோர்  எவ்விதமான வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்த மாட்டார்கள். காரணம், பூமியின் ரத்தநாளங்களாக இருக்கும் நதிகளின் ஊற்றுக்கண்கள் எல்லாம் மலைகளில்தான் இருக்கின்றன. அங்கிருந்துதான் ஆயிரக்கணக்கான ஓடைகள் உற்பத்தியாகின்றன. எனவே மலையின் இயல்பைக் கெடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால்,  கோடை வாசஸ்தலம் என்கிற பெயரில் மலையைக் குடியிருப்புப் பகுதியாகவும், வணிகக் தளங்களாகவும், தேயிலைத் தோட்டங்களாகவும் அத்துமீறி ஆக்கிரமித்து வைத்திருக்கிறோம். இவற்றை உடனடியாக நிறுத்த நடவடிக்கை தேவை. 3 குறுகிக்கொண்டே வரும் காடுகளின் பரப்பளவைப் பெருக்க வேண்டும். குறிப்பாக சோலைக்காடுகளின் பெருக்கம் மிகவும் முக்கியம். ஆங்கிலேயர்கள் காலம் முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரை யாருக்கும் சோலைக்காடுகள் என்றால் என்னவென்றே தெரியவில்லை. ஆனால், இந்தக் காடுகள்தான், மலைகளில் பெய்யும் மழை நீரை ஆறு மாதங்கள் வரை தேக்கிவைத்து கொஞ்சம் கொஞ்சமாகக் கசியவிடும். இந்தக் காடுகள் இருந்த இடங்கள் எல்லாம் இப்போது தேயிலைத் தோட்டங்கள் ஆக்கிரமித்துவிட்டன. இதை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். 4. தமிழகத்தில் மலைக்காடுகள் மட்டுமல்ல. கோயில் காடுகளும் இருந்திருக்கின்றன. இவற்றின் பரப்பளவு மூன்று சதுரக் கிலோமீட்டர் முதல் 200 சதுரக் கிலோமீட்டர் வரை. இதற்கான ஆதாரங்கள் இன்றைக்கும் அரசு ஆவணக் கோப்புகளில் இருக்கின்றன. மீண்டும் அதே பரப்பளவுக்கு கோயில் காடுகள் உருவாக்கப்பட வேண்டும். ஏனென்றால் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளைக் காட்டிலும்  அதிக அளவுக்கு வெப்பத்தைக் குறைப்பதிலும், கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுவதிலும் கோயில் காடுகள்தான் அதிகப் பங்காற்றுகின்றன.

சுற்றுச் சூழலியலை காக்க  20 வழிகள்...! #WhereIsMyGreenWorld

5. ஆசியாவிலேயே மிகப் பெரிய சமவெளிப் பகுதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள்தான். இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 5000 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக விவசாயம் செய்யப்படுகிறது. உலகத்தில் வேறு எங்கும் தொடர்ந்து 5000 வருடங்களாக ஒரு நிலம் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக வரலாறு இல்லை. எனவே டெல்டா மாவட்டங்களை விவசாயப் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயத்தைப் பாதிக்கக்கூடிய தொழிற்சாலை அங்கே வர முடியாது. அப்படி அறிவிக்கப்படாததால்தான் மீத்தேன் திட்டம், நரிமணம் எரிவாயு  திட்டங்கள்... போன்றவை விவசாயத்துக்கும் விவசாயிக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. 6 நாட்டு மீனவர்கள் கடல் பல்லுயிர் பெருக்கம் பற்றிய அறிவுகொண்டவர்கள். எந்தக் காலத்தில் என்ன வகையான மீனைப் பிடித்தால் கடலில் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படாது என்பது அவர்களுக்குத் தெரியும். வணிக நோக்கத்தில் மீன் பிடிப்பவர்கள் பயன்படுத்தும் விசைப்படகுகளும், இரட்டை மடி வலைகளும்தான் கடலின் பல்லுயிர் பெருக்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. இதனால் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே நாட்டு மீனவர்களை  கடல் பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் சில பிரத்யேக உரிமைகளைப் பெறமுடியும். 7. அத்தனை அரசியல் கட்சிகளும், அரசுகளும் மணற்கொள்ளை, இயற்கை வளங்களைச் சூறையாடுதல் ஆகியவை குறித்த தங்களது நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தங்களது தேர்தல் அறிக்கைகளிலும், அரசாங்கம் அமைத்த பிறகும் சுற்றுச்சூழல் இயற்கை வளங்களைக் கையாளுதல் சம்மந்தமாக தங்கள் நிலைப்பாடு என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும். ஆற்று மணல் எடுத்தல், கிரானைட் எடுத்தல் போன்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் அளவு குறித்து, ஆண்டுக்கு ஒரு முறை சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ 'வெள்ளை அறிக்கை' சமர்ப்பிக்க வேண்டும். அப்போது அவர்கள் குறைத்து சொன்னாலோ அல்லது கூடுதலாகச் சொன்னாலோ மக்கள் கேள்வி கேட்க வசதியாக இருக்கும். 8. உருகுவே, ஈக்வெடார் போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக  எந்த ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும், அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவார்கள். கையெழுத்து இயக்கத்தை நடத்துவார்கள். 25 சதவிகிதத்துக்கு மேல் எதிர்ப்பு இருந்தால் உடனடியாக அந்தத் திட்டத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளும். ஆனால், இந்தியாவில் பொதுவாக்கெடுப்பு நடத்தாமல், பொதுமக்கள் கருத்துக்கேட்பு மட்டுமே நடத்துவார்கள். இயற்கை வளங்கள் சம்பந்தமான திட்டங்களைச் செயல்படுத்தும்போது, லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பின்பற்ற வேண்டும் .

சுற்றுச் சூழலியலை காக்க  20 வழிகள்...! #WhereIsMyGreenWorld

9. நம் நாட்டில் ஒரு வெளிநாட்டுத் தொழிற்சாலை அமைக்கும்போது, அதில் இவ்வளவு வேலைவாய்ப்பு கிடைக்கும், இவ்வளவு வருவாய் பெருகும் என்றெல்லாம் அறிவிக்கிற அரசு, அந்தத் தொழிற்சாலையால் பயன்படுத்தப்படும் மறை நீர் (virtual water) எவ்வளவு என்பதையும் தெரிவிக்க வேண்டும். உதாரணமாக மூன்று நிமிடங்களில் ஒரு கார் தயாரிக்கிறோம் என்று பெருமையாகச் சொல்வார்கள். ஆனால், அந்தக் காரைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு எவ்வளவு தெரியுமா..? சுமார் 4 லட்சம் லிட்டர். மூன்று நிமிடங்கள் ஒரு கார் வீதம் தயாரிக்கப்படும் அத்தனை கார்களும் தமிழகத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலும் வெளிநாடுகளுக்குத்தான் அனுப்பப்படுகின்றன. சென்னையில் குடிதண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாட காரணம்  ஏன் என்பது இப்போது உங்களுக்கே புரியும். 10. மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தால்கூட தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு இயற்கை வளச் சுரண்டல் செய்யும் திட்டங்களை அறிவித்துவிடும். உதாரணம்... டெல்டா மாவட்டம் நரிமணத்தில் இருக்கும் ஓ.என்.ஜி.சி. இதனால் திருவாரூர் மாட்டத்தில் அநேகப் பிரச்னைகள் இப்போதும் இருக்கின்றன. ஆனால், இது மத்திய அரசு திட்டம் என்று மாநில அரசு நழுவிக்கொள்கிறது. ஆனால், இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசாங்க வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் மக்கள் வாழும் இடங்களுக்கு தீங்களிக்கும் திட்டங்களை அப்புறப்படுத்த முடியும். இப்படித்தான் அஸ்ஸாமில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் போராட்டத்தின் மூலம் ஓ என் ஜி.சி திருப்பி அனுப்பட்டது. ஏன் இது மாநில அரசின் வரம்புக்குள் வரவேண்டும் என்றால்... ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காகவாவது மாநில அரசு இதுபோன்ற தீங்குவிளைவிக்கும் திட்டங்களைத் திருப்பி அனுப்பும். 11. புட்டிநீர் விற்பனையை முழுமையாகத் தடைசெய்ய வேண்டும். காரணம், தனியார் செய்யும் இந்த வேலையை ஏன் அரசால் செய்யமுடியாது. தவிரவும், இந்தப் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தன்னைத் துண்டித்துக்கொள்கிறது என்றுதானே அர்த்தம். எனவே தனியார் செய்யும் தண்ணீர் வியாபாரத்தை முற்றிலும் தடுக்க வேண்டும். 12. ஒரு பகுதியில் வசிக்கும் மக்களின் குடித்தண்ணீருக்கு முதலிடம் கொடுத்துவிட்டுத்தான் அந்தப் பகுதியில் நடக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு தண்ணீரை பயன்படுத்த வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. உதாரணம் சிவகங்கை மாவட்டம் பரமாத்தூர். இங்கே ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால், கோகோ கோலா கம்பெனிக்கு போர்வெல் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்ச அனுமதி இருக்கிறது. ஏன் அந்த நீரை சிவகங்கை பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு அரசாங்கம் வழங்கக் கூடாது. ஆனால், திருச்சி காவிரியில் இருந்து, கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் ராமநாதபுரம் சிவகங்கை பகுதிகளுக்கு தண்ணீர் போவது ஏமாற்று வேலைதானே? 13. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். கடல் நீரைக் குடிநீராக்க பயன்படுத்தப்படும் ஒரு நாள் மின்சாரத்தை வைத்து 10 கிராமங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்துவிடலாம். சென்னையின் குடிநீர் தேவை 13 டி.எம்.சி. ஆனால், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் 2 டி.எம்.சி குடிநீர் மட்டும்தான் கிடைக்கிறது. மீதமுள்ள 11 டி.எம்.சி தண்ணீரை எப்போதும் போல மற்ற பகுதியில் இருந்துதான் பெறுகிறது சென்னை குடிநீர் வாரியம். சென்னைக்கு குடிதண்ணீர் வாங்கும் 29 ஏரிகளில் 10 ஏரிகளைக் காணவில்லை. அந்தப் பத்து ஏரிகளில் இன்றைக்கு நகரமாகிவிட்ட கொளத்தூர், விருகம்பாக்கம் போன்ற பகுதிகள் அடக்கம். மீதமுள்ள ஏரிகளைத் தூர் வாரி அவற்றின் கொள்ளவை உயர்த்தினாலே சென்னை மாநகர மக்களின் குடித்தண்ணீர் தேவை தன்னிறைவை நோக்கி நகர ஆரம்பித்துவிடும். 14. சிறுதானியத்தை ஊக்குவிக்கப்பதுபோல மருத்துவத் துறையில் சித்த மருத்துவத்தை அதிகமாக ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் நமது பாரம்பர்ய மூலிகைகளை மீட்டெடுக்க முடியும். இதனால் சுற்றுச்சூழலும் மேம்படும். டெங்கு, சிக்குன்குன்யா, வைரல் ஃபீவர்... போன்றவற்றுக்கெல்லாம் என்னென்னவோ மருத்துவம் பார்த்துவிட்டு கடைசியில் நாம் வந்து நின்றது நிலவேம்பு கஷாயத்திடம்தான். மூலிகைகள் அதிகமாகப் பயிரிடப்படுவது மானாவாரி நிலங்களில்தான். மானவாரி நில விவசாயத்தில் ரசாயன உரங்களுக்கு வேலையே இல்லை. இதனால் மானாவாரி நிலத்தின் இயல்புத் தன்மை காக்கப்படும்.  

சுற்றுச் சூழலியலை காக்க  20 வழிகள்...! #WhereIsMyGreenWorld

15. கடலோரத்தில் இருக்கும் அலையாத்திக் காடுகள், அக்கறையோடு பராமரிக்கப்பட வேண்டும். சுனாமியைத் தடுத்து அது தரும் ஆபத்தில் இருந்து மக்களைக் காத்தது மட்டும் இதன் முக்கியத்துவம் அல்ல. இன்றைக்கு தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு மீன்கள்தான் உணவு. அவற்றின் மூலம் மட்டுமே மக்களுக்கு புரோட்டீன் சத்து கிடைக்கிறது. அப்படிப்பட்ட 80 சதவிகித மீன் உற்பத்திக்கு அலையாத்திக் காடுகளும், கழிமுகப்பகுதிகளுமே  ஆதாரமாக இருக்கின்றன. தமிழகத்தில் இருக்கும் பிச்சாவரம் - முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளுக்கு இடையே 14 அனல் மின் நிலயங்கள் அமைக்கும் திட்டம் இருப்பதாக அப்போதை திமுக அரசாங்கம் சொன்னது. பின்னர் வந்த அதிமுக அரசாங்கம், அதைக் கிடப்பில் போட்டுவிட்டது. அந்தத் திட்டத்தை உடனடியாக அரசு கைவிடவேண்டும். ஏனென்றால், இந்த அனல்மின் நிலையங்கள்,  அலையாத்திக் காடுகளுக்கு எமனாக வந்து முடியும். இதனால் மீன் வளம் பாதிக்கப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகிவிடும். ராமநாதபுரத்தில் இருந்து புதுகோட்டை மாவட்டம் வரைக்கும் உள்ள கடல் பகுதியை சேற்றுக் கடல் என்பார்கள். இது இறால் உற்பத்திக்கு சாதகமான நிலப்பகுதி. காரணம் இவை எல்லாம் ஒரு காலத்தில் அலையாத்திக் காடுகள் இருந்த பகுதிகள்.  16 சென்னை போன்ற மாநரங்களில் வாகனங்களால் உண்டாகும் காற்று மாசு என்பது அபாயகரமாக இருக்கிறது. செயின்ட் தாமஸ் போன்ற உயரமான இடங்களில் நின்று,  இரவு நேரங்களில் பார்த்தால் நகரத்தின் மேலே காற்றில் சிவப்புப் படலம் படர்ந்திருப்பதைக் காண முடியும்... இவை எல்லாம் வாகனங்கள்,  தொழிற்சாலைகள் வெளியேற்றிய கார்பன் மோனாக்ஸைடு. இவை ஓசோன் படலத்துக்குக் கீழே இன்னொரு படலமாகத் தேங்கியிருக்கும். அவ்வளவும் நச்சுக்கள். எனவே வெளிநாட்டுக் கார் கம்பெனிகள் இங்கு வந்து தொழில் தொடங்கும்போது தமிழகம் மற்றும் இந்திய தேவைக்கு ஏற்ப கார்களை உற்பத்தி செய்தால் போதும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். ஏனெனில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு கார் உற்பத்தி செய்யும் அளவுக்கு காரின் தேவை தமிழகத்துக்கோ, இந்தியாவுக்கோ இல்லை. 17. சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய எதிரி பாலீத்தின் பைகள் என்றால், அதைவிட வீரியமான எதிரி சின்னச் சின்ன பாலித்தீன் சாஷேக்கள்தான். இவற்றின் உற்பத்தியைத் தடை செய்யவேண்டும். வீட்டுச் சாக்கடையில் இருந்து பாதளச் சாக்கடை வரை அனைத்திலும் அடைப்புகளை உண்டாக்குவதில் இவற்றின் பங்கு மிக அதிகம். ஒருவர் நாளொன்றுக்கு 15 பாலீத்தீன் பைகள் பயன்படுத்தினால்,  சாம்பு  கவர், பாக்குத் தூள் பாக்கெட், பருப்பு பொடி பாக்கெட், தண்ணீர் பாக்கெட் என பாலீத்தீன் சாஷேக்களை 50-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பயன்படுத்துகிறோம். இவை மக்காதத் தன்மை கொண்டவை. இவை மண்வளத்தை அதிகமாகப் பாதிக்கின்றன. பாலீத்தின் பைகளை பொறுக்கிக்கூட மறுசுழற்சிக்கு விடலாம் என்கிறார்கள். ஆனால், பாலீத்தின் சாஷேக்களைப் பொறுக்கி மறுசுழற்சிக்கு அனுப்பும் வாய்ப்பு மிக மிக கடினம். 19. 1920 வாட்டர் ஆக்ட் ( Water act ). ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட இந்தச் சட்டம் சொல்வெதல்லாம் ஊராட்சிக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள் எதையும் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் கலக்கக்கூடாது என்பதுதான் . ஆனால், இது சட்டமாக மட்டுமே இருக்கிறது; நடை முறையில் இல்லை. சென்னையில் அப்படி கலந்துதான், கூவம், அடையாறு போன்ற ஆறுகளைச் சாக்கடையாக்கிவிட்டோம். இதனைத் தடுக்கவும் கழிவுகளைச் சரியான முறையில் மேலாண்மை செய்யவும்,  திட்டங்களும் சட்டங்களும் தேவை. மயிலாடுதுறை சத்தியாவனம் கால்வாயில்,  சரியாக சுத்திகரிக்கப்படாத ஊராட்சிக் கழிவுகள்  கலந்ததன் மூலம், அந்தக் கால்வாய் பாசனம் பெறும் 50-க்கும் மேறபட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஊர் மக்கள், சத்தியாவனம் கால்வாயை சின்னக் கூவம் என்றே அழைக்கிறார்கள். இது ஒரு சின்ன உதாரணம்தான். இதுபோல தமிழ்நாட்டில் அநேக உதாரணங்களைச் சொல்ல முடியும். 20. ஈக்வெடார் நாட்டில் தாய்மண் உரிமைச் சட்டம் என்று நிலப் பாதுகாப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறார்கள். இயற்கை வளங்களுக்கு எதிரான எல்லாத் திட்டங்களையும் இந்தச் சட்டம் எதிர்க்கிறது. இயற்கை வளங்கள் சல்லிசாகச் சூறையாடப்படும் தமிழகத்தில்,  இந்தச் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். இயற்கை வளத்துக்கு எதிரான ஒரு திட்டத்துக்கு அரசாங்கம் அனுமதிக்கொடுத்தாலும், இந்தச் சட்டத்தின் மூலம் அந்தத் திட்டத்தை நிறுத்திவைக்க முடியும்.

மனித உரிமையைவிட, நிலம், இயற்கை வளப் பாதுகாப்புக்கு இது மிக முக்கியத்துவம் தருகிறது. எந்தவொரு தனிமனிதனும் இத்திட்டத்தின் மூலம் நிலம் இயற்கை வளங்களைப் பாதுக்காக்க நீதிமன்றத்தில் வழக்குத்  தொடுக்க முடியும்.  இந்தச் சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த 13 லத்தீன் அமெரிக்க நாடுகள், இதை அமல்படுத்தும் முயற்சியில் இருக்கின்றன. இதன் மூலம் நிலத்துக்கு எதிரான கார்ப்பரேட் கம்பெனிகளின் லாப வெறியைத் தடை செய்ய முடியும்.  

- கதிர்பாரதி

  • UK & Europe
  • United States
  • Meet Sadhguru
  • Sadhguru Radio
  • Sadhguru Quotes
  • Youth N Truth
  • Beginner's Programs
  • Free Yoga & Guided meditation
  • Inner Engineering
  • Isha Health Solutions
  • See all beginner programs
  • Advanced Programs
  • Bhava Spandana
  • Shoonya Meditation
  • Additional Programs
  • Sadhanapada
  • Sacred Walks
  • See all additional programs
  • Children's Programs
  • Become a Teacher
  • Monthly Events
  • Free Yoga Day
  • Pancha Bhuta Kriya
  • Online Satsang
  • Annual Events
  • Lunar/Hindu New Year
  • Guru Purnima
  • Mahashivratri
  • International Yoga Day
  • Mahalaya Amavasya
  • Special Events
  • Ishanga 7% - Partnership with Sadhguru
  • Yantra Ceremony With Sadhguru
  • Sadhguru Sannidhi Sangha
  • Pancha Bhuta Kriya Online With Sadhguru on Mahashivratri
  • Ecstasy of Enlightenment with Sadhguru
  • Sadhguru in Chennai

Main Centers

  • Isha Yoga Center
  • Sadhguru Sannidhi Bengaluru
  • Sadhguru Sannidhi, Chattarpur
  • Isha Institute of Inner-sciences
  • Isha Yoga Center LA, California, USA
  • Local Centers

International Centers

  • Consecrated Spaces
  • Adiyogi - The Source of Yoga
  • Adiyogi Alayam
  • Dhyanalinga
  • Linga Bhairavi
  • Spanda Hall
  • Theerthakunds
  • Adiyogi - The Abode of Yoga
  • Mahima Hall
  • Online Medical Consultation
  • In-Person Medical Consultation
  • Ayurvedic Therapies
  • Other Therapies
  • Residential Programs
  • Diabetes Management Program
  • Joint and Musculoskeletal Disorders Program
  • Sunetra Eye Care
  • Ayur Sampoorna
  • Ayur Rasayana Intensive
  • Ayur Rasayana
  • Pancha Karma
  • Yoga Chikitsa
  • Ayur Sanjeevini
  • Non-Residential Programs
  • Obesity Treatment Program
  • ADHD/Autism Clinic
  • Cancer Clinic
  • Conscious Planet

logo

உலக சுற்றுச்சூழல் தினம் - எப்படிக் கொண்டாடலாம்?! (World Environment Day in Tamil)

ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடும் நிலையில், சுற்றுச்சூழலைக் காப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து ஒரு நினைவூட்டல் இங்கே!

உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day in Tamil)

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெருகிவரும் மக்கள்தொகையாலும் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதை விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஒரு புறம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் கூடிவரும் கத்தரி வெயிலின் தாக்கமும், திடீரென்று பெய்யும் பேய் மழையும், அதனால் விளையும் பெருவெள்ளமும் இயற்கையில் ஏதோ ஒழுங்கற்ற தன்மை உருவாகி வருவதை சூசகமாக உணர்த்துகின்றன.

உலக வெப்பமயமாதல் எனும் பிரச்சனையால் பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயரும் என்று சொல்லப்படுகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தண்ணீர் பஞ்சமும் இந்தியாவின் பல இடங்களில் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப் பார்த்து, இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது குறித்து சிந்தித்து செயலாற்றுவதற்கான ஒரு நாளாகவே இந்த உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

iceberg, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

சுற்றுச்சூழலைக் காக்க இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் முன்வர வேண்டும். இந்த உலகில் மனிதன் மட்டும்தான் உள்ளானா?! ஏன்... விலங்குகளும் பறவைகளும் கூட வாழ்கின்றன. அவைகள் ஏதும் செய்யக்கூடாதா என மனிதர்கள் கேட்பதற்கு நியாயமில்லை! ஏனெனில், மனித இனத்தை தவிர வேறெந்த உயிரினத்தாலும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை!

முன்னோர்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

நம் முன்னோர்கள் சுற்றுச்சூழல் குறித்த பெரும் அறிவையும் விழிப்புணர்வையும் கொண்டிருந்தனர் என்பதற்கு இலக்கியங்களில் கூட பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக நிலத்தை ஐவகை திணைகளாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரித்து, அங்கு வாழும் மக்களுக்கு ஏற்ப தொழில்கள், கலாச்சாரங்கள், கடவுள்கள் என வகுத்து முறையானதொரு வாழ்வை மேற்கொண்டனர். உதாரணமாக மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி என்றால் மலையையே அவர்கள் கடவுளாகத்தான் பார்த்தார்கள். கடலும் கடல்சார்ந்த இடம் நெய்தல் என்றால் கடலை தேவதையாக வழிபட்டனர். நம்மைச் சுற்றியிருக்கும் நம் நிலத்தையும், நீரையும், காற்றையும் நம் வாழ்க்கையின் மிக உயரிய அங்கமாகக் கருதி வழிபட்டதால், அதனை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலை இயல்பிலேயே இருந்தது.

குறைந்தபட்சம் 166 பயிரினங்கள் நமது நாட்டில் உண்டு. நெற்பயிரில் மட்டும் 50,000 இனங்கள் உண்டு. சோளத்தில் 5000 ரகம் உண்டு. மிளகுப் பயிரில் 500 வகையும் மாமரத்தில் 1000 வகையும் உண்டு. ஒவ்வொரு விலங்கினத்திலும் பலவகை உண்டு. வெள்ளாட்டில் 20 வகை, செம்மறியில் 42 வகை, எருமையில் 15 வகை, கால்நடையில் 30 வகை, கோழியில் 18 வகை, இப்படியாக சூழல் அமைப்புக்கு ஏற்ப மனித உதவியின்றியே இவை பரிணமித்துள்ளன. இந்த உயிரினங்களில் மனிதன் கோடியில் ஒரு துளி. இத்தனை உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு.

வணிக மனப்பான்மையின் அபாயம்

oxygen cylinder, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

மனிதனோ பூமி தனக்கு மட்டுமே சொந்தம் என எண்ணிக்கொள்கிறான்.

இந்த நிலை மாறவேண்டுமானால், முதலில், மனிதனின் மனநிலையில் ஒரு மாற்றமும் புரிதலும் தேவைப்படுகிறது. மற்ற உயிர்களைப் பற்றி சிந்திக்கும் தன்மையும் உணர்வும் மனிதனின் உள்நிலையில் அவசியமாகிறது.

இன்றைய மனிதனோ அனைத்தையும் வணிகப் பொருளாக பார்க்கத் துவங்கிவிட்டான். நிலமும், நீரும் தற்போது முற்றிலும் வணிகமயமாகிவிட்டன. நாம் சுவாசிக்கும் காற்றும் கூடிய விரைவில் கடைத்தெருக்களில் சிலிண்டர்களில் விற்பனைக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் இல்லை. இந்நிலைக்குக் காரணம் என்ன என்பதை சற்று ஆராய முற்பட்டோமானால், முதற்காரணமாக நம்முன்னே தெரிவது மக்கள்தொகை பெருக்கம்தான் . சுதந்திரம் பெறும் தருணத்தில் 33 கோடியாக இருந்த நம் எண்ணிக்கை, மூன்று மடங்கிற்கு மேல் தற்போது பெருகியுள்ளதைப் பார்க்கிறோம். இந்நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நிலம், நீர், காற்று மட்டுமல்ல, ஆகாயமும் கூட நமக்கு போதாமல் போய்விடக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும்.

காரணங்களும் தீர்வுகளும்

Population Explosion, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

மக்கள்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருகியதால் இயல்பாகவே தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் பெருகின. இதன் கழிவுகள் அனைத்தும் காற்றுமண்டலத்திலும், நிலத்திலும், ஆறு, கடல்களிலும் கலந்து சுற்றுச்சூழலை மாசடையச் செய்துவருகின்றன. எனவே, நாம் சுற்றுச்சூழலைக் காப்பதற்கு முதன்மையாக செய்யவேண்டியது மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டியதுமே ஆகும்.

அடுத்த படிகளாக, நாம் ஒவ்வொருவரும் இந்த காற்று மண்டலத்தில் பதிக்கும் கார்பன் கால்தடங்களை குறைக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் குறிப்பிட்ட அளவு கார்பனை வளிமண்டலத்தில் கலக்கச் செய்கிறான். தற்போது உள்ள நிலவரப்படி கணக்கிட்டால், நாம் எடுத்துக்கொள்ளும் ஆக்ஸிஜனுக்கு ஈடுசெய்து நாம் விட்டுச் செல்லும் 'கார்பன்' கால் தடங்களைக் குறைக்கும் விதமாக ஒவ்வொருவரும் குறைந்தது 5 மரக்கன்றுகளாவது நடவேண்டும்.

சுற்றுச்சூழலில் ஆக்ஸிஜன் அதிகரிக்க…

Tree planting, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

பொதுவாக, ஒரு வளர்ச்சியடைந்த மரமானது, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவையான 260 பவுன்ட் அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றது.

பொதுவாக நாம் மகிழ்வுந்து, இருசக்கர வாகனம் என ஆளுக்கொரு வாகனத்தில் பயணிக்கிறோம். 100 பேர் 100 வாகனங்களில் செல்வதற்கு பதிலாக அனைவரும் ஒரு பேருந்தில் பயணம் செய்தால் கூடுதலாக 99 வாகனங்கள் புகை கக்குவதைத் தடுக்க முடியும் அல்லவா?! அதேபோல் புகை கக்கும் வாகனங்களுக்கு பதிலாக மிதிவண்டியை கூடுமானவரை பயன்படுத்தலாம். இதனால் உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

காகிதப் பயன்பாட்டில் கவனம்

Old newspapers, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

செய்தித்தாள் ஒன்றை, 9 முறை மறுசுழற்சி செய்யமுடியும் என்று சொல்கிறார்கள். எனவே, படித்துவிட்டு செய்தித்தாளைக் கீழே வீசவேண்டாம். 1 மீட்டர் உயரத்துக்கு அடுக்கப்பட்டுள்ள செய்தித்தாள்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் 7 மீட்டர் உயரமுள்ள மரம் வெட்டப்படுவதைத் தவிர்க்கலாம் என சொல்லப்படுகிறது. எளிமையான வாழ்க்கை என்பது சுற்றுச்சூழலைக் காப்பதற்குத் துணைநிற்கும்.

மறுசுழற்சி, மறு பயன்பாடு என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது. காடுகளை அழிப்பதில் பேப்பர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆகவே, பேப்பர்களைப் பயன்படுத்தும்போது நிதானமாகச் செயல்படுவது நல்லது. தட்டச்சு செய்யும்போது இரண்டு பக்கங்களிலும் செய்யலாம்.

இன்று எளிதாகக் கிடைக்கக்கூடிய உலோகம் அலுமினியம். சிகரெட் பாக்கெட்டில் இருக்கும் அலுமினியத் தாள்கள், பாட்டில் மூடிகள், மாத்திரைகள் இருக்கும் அலுமினிய அட்டைகள், பழைய பாத்திரங்கள் ஆகியவை மீண்டும் பயன்படும் புதிய பொருட்களாக மாற்றப்படலாம். இவற்றை சேமித்து வைத்து, சேகரிப்பவரிடம் கொடுக்கலாம்.

உலக சுற்றுச்சூழல் தினம் - மேற்கொள்ள வேண்டிய உறுதிகள்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்னென்ன எனப் பார்த்தால், அதில் முக்கியமானது குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம் நடுவது. அடுத்தபடியாக, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது. இயற்கை விவசாய முறைகளைக் கையாளுதல்; வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்தல் போன்றவற்றை சொல்லலாம்.

தவிர்க்க வேண்டியதென்று பார்த்தால், அத்தியாவசிய தேவைக்குத் தவிர மற்ற நேரங்களில் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது. அதற்குப் பதிலாக மிதிவண்டிகளைப் பயன்படுத்தப் பழகினால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு உடல்நலமும் மேம்படும் வாய்ப்புள்ளது. வீட்டிலிருந்து புறப்படும் முன், மின்சாதன பொருட்களை அணைக்காமல் செல்லுதல் போன்ற சின்னச் சின்ன செயல்களையும் நாம் கவனித்து தவிர்க்கத் தேவையுள்ளது!

புகைப்பதை தவிர்ப்போம்…!

புகைபிடித்தலைத் தவிர்க்கலாம். அது புகைப்பவரின் உடல்நலத்திற்கு மட்டுமல்லாமல் உடனிருப்பவருக்கும் தீங்கை விளைவிக்கும். ஆண்டுதோறும் அமெரிக்காவில் புகை பிடிக்காத 4,000 பேர் புற்றுநோய் வந்து இறக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. கண்ணாடி, மண்ணோடு மக்க குறைந்தது 100 ஆண்டுகள் ஆகும். எனவே, கண்ணாடியை மறுபயன்பாட்டுக்கும், மறுசுழற்சிக்கும் அனுப்பவேண்டும். நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் என்பது மண்ணில் மக்கக்கூடியதே அல்ல. ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது சுற்றுச்சூழலுக்கு மிகவும் அவசியமானதாகிறது. பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களைக் கீழே வீசாமல் மறுபயன்பாட்டுக்கும், மறுசுழற்சிக்கும் அனுப்பலாம். பொருட்களை வாங்க கடைக்குச் செல்லும்போது, வீட்டில் இருந்தே பை எடுத்துச் செல்லலாம்.

பிளாஸ்டிக் எனும் பேரரக்கன்…

Plastic waste inside a bird, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

2018ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஈஷா அறக்கட்டளையும், நதிகளை மீட்போம் இயக்கமும் ஐநா சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடைசெய்வதற்கான முன்னெடுப்புகளை முன்னின்று நிகழ்த்தின.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள மிட்வே அடோல் தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த செப்டம்பர் 2009ல் இறந்த அல்பட்ரோஸ் வகை கடல்பறவை குஞ்சின் இரைப்பை பகுதி புகைப்பட கலைஞரால் படம்பிடிக்கப்பட்டது. அதில், அதன் தாய் பறவையால் பிளாஸ்டிக் கழிவுகள் அந்தக் குஞ்சுக்கு ஊட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

முறையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு நாம் கொடுத்த விலை!

முறையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நாம் நம் சுற்றுச்சூழலில் பலவிதமான பாதிப்பை உண்டாக்கிக் கொண்டுள்ளோம்... அவற்றில் சில இங்கே!

Plastic waste in Sea, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

60 முதல் 90% கடல் கழிவுகள் பலவகைப்பட்ட பிளாஸ்டிக் மூலப்பொருட்களால் சேர்கின்றன.

2015ல் உலக அளவிலான பிளாஸ்டிக் உற்பத்தியின் மதிப்பானது 900 எம்பயர் ஸ்டேட் கட்டிடங்களுக்கு இணையானது என கணக்கிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நம் கடல்களில் 51 ட்ரில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் அங்கங்கள் சேர்ந்துள்ளன.

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் வழிகள்

avoid one time use plastic, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

நீங்கள் உண்மையிலேயே பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்யாமல் தவிர்க்க விரும்பினால், மீண்டும் மீண்டும் தண்ணீர் நிரப்பி பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள்!

குளிர்பானங்களோ அல்லது வேறு பிற பானங்களோ கடைக்காரரிடம் வாங்கி அருந்தும்போது, பிளாஸ்டிக் straw வாங்காமல் மறுத்துவிடுங்கள்!

பொருட்கள் வாங்க கடைத்தெருவிற்கு செல்லும்போது, நீங்கள் துணிப்பையை உடன் எடுத்துச் செல்லவும். ஒரு நபர் சராசரியாக 12 நிமிடங்கள் மட்டுமே ஒரு பிளாஸ்டிக் பையை உபயோகித்து பின் தூக்கி எறிகிறார். நீங்கள் அதுபோன்ற ஒரு நபராக இருக்க வேண்டாம்.

உணவுப் பதார்த்தங்களை கொண்டு செல்லும்போது, பதார்த்தங்களை எடுத்துச்செல்ல பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் கவர்களை புறந்தள்ளிவிட்டு, ஏன் நீங்கள் உங்கள் சொந்த பாத்திரங்களில் எடுத்துச் செல்லக்கூடாது?! இப்படிச் செய்வது உங்களுக்கு ஒருவேளை ஆரம்பகாலத்தில் அசௌகரியமாக தோன்றலாம். ஆனால், இதுவே பழக்கமாகிவிட்டால், பின்னர் அது எளிமையாகிவிடும்.

ஒரு நுகர்வோராக உங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதன் மூலம் நீங்கள் மகத்தான மாற்றத்தை உண்டாக்க முடியும்! பிளாஸ்டிக் நுண்பொருட்கள் அல்லது பிளாஸ்டிக் பேக்கேஜிங் இல்லாத பொருட்களைப் பார்த்து வாங்கவும். இது ஒரு எளிய படி என்றாலும், இதன்மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகும் ஒரு பெரிய தொடர் சங்கிலி துண்டிக்கப்படுகிறது.

மேற்கூறிய இந்த விஷயங்கள் நீங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கக் கூடிய எளிமையான தீர்வுகளாகும்.

உங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து, பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக அவர்கள் கையில் இருக்கும் துணிப்பைகளுடனோ அல்லது பிளாஸ்டிக் Strawக்கு பதிலாக உலோக உறிஞ்சிகள் அல்லது வேறு மறுசுழற்சி ஆகக்கூடிய பொருட்களுடனோ ஒரு செல்ஃபி எடுத்து பகிருமாறு கேட்டுக் கொள்ளவும். இதனை மேலும் ஐந்து நண்பர்களுக்கு Tag செய்து இதைப் பற்றி தெரிவிக்கச் சொல்லவும்.

இயற்கை விவசாயத்தின் அவசியம்

இரசாயன விவசாயத்தால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழலும் மனித ஆரோக்கியமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இயற்கை விவசாய நுட்பத்தைக் கடைபிடிப்பதே இதற்கான தீர்வாக இருக்கும்.

இரசாயன உரங்களைத் தவிர்த்து, கால்நடை எரு, பஞ்சகாவியம் போன்ற இயற்கை ஊக்கிகளைப் பயன்படுத்தி இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வதன்மூலம், மண்வளமும் மனித ஆரோக்கியமும் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

தற்போது ஈஷா விவசாய இயக்கம், இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை கொண்டு சேர்க்கின்றது. விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்திற்கான பயிற்சியளித்து, இயற்கையின் பக்கம் திரும்பி வருகின்றனர்.

மலையை தூய்மை செய்யும் ஈஷா!

Velliangiri Mountain Cleaning, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

இயற்கை அன்னையின் தூய்மை மடியான மலைகளிலும் கூட, மனிதர்கள் குப்பைகளை நிறைக்கத்தான் செய்கிறார்கள். தென் கைலாயம் என்று போற்றப்படும் புனித வெள்ளியங்கிரி மலை அந்த சிவன் அமர்ந்த மலை மட்டுமல்ல, யானைகளின் காப்பகமாகவும், பல வன விலங்குகளின் இருப்பிடமுமாக இருக்கிறது. ஆனால் இந்தப் பசுமை நிறைந்த வெள்ளியங்கிரியும் பிளாஸ்டிக் குப்பைகளால் கொஞ்சம் காயம்பட்டே உள்ளது. இந்த மலைகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈஷா யோக மையம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.

அந்த விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினத்தில், ஈஷா தன்னார்வத் தொண்டர்களும், பல கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் வெள்ளியங்கிரி மலையேறி பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுகின்றனர்.

மரம் நடுவதன் அவசியம்!

Tree Planting, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

மரங்களின் வெளிமூச்சே மனிதனின் உள்மூச்சாகிறது. நமது பாதி நுரையீரலே மரங்களில்தான் தொங்கிக் கொண்டுள்ளன என சத்குரு அவர்கள் சொல்வதுண்டு.

இறந்தவர்களைப் புதைப்பது நல்லதா அல்லது எரிப்பது நல்லதா என்று ஒருமுறை சத்குரு அவர்களிடம் கேட்டபோது, “வாழும்போது எப்படி வாழ்கிறோம் என்பதை பொறுத்துதான், நம் நினைவிடங்களுக்கு மரியாதை என்பதை மறக்காதீர்கள். இறந்தவரைப் புதைத்து கான்க்ரீட் கல்லறை எழுப்பி, அந்த இடத்தைச் சொந்தம் கொண்டாடுவதால் என்ன லாபம்?

அதற்குப் பதிலாக அவரைப் புதைத்த இடத்தில் ஒரு மரம் நடுவது என்று முடிவு செய்யுங்கள். ஏக்கர் ஏக்கராக கான்க்ரீட் கல்லறைகள் எழுப்பி பூமியை மொட்டையடிப்பதைவிட, அங்கு ஏக்கர் கணக்கில் மரங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். மாண்டவர் எருவாகி, பச்சை இலைகளாகவும், வண்ணப் பூக்களாகவும் மீண்டும் உயிர் கொள்ளட்டுமே! பின்னால், வரும் சந்ததிகளுக்கு நிழலும், மழையும் கொடுக்கட்டுமே! மாண்டவரே மரமாக நிமிர்ந்து உயிருடன் ஓங்கி வளர்கிறார் என்று உணர்வுப்பூர்வமாக ஒரு திருப்தியும் கிடைக்கும் அல்லவா!” என்று சொல்லி சுற்றுச்சூழலுக்கு மரம் நடுதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார்.

தமிழகத்தின் இந்த வறட்சி நிலையை மாற்றுவதற்காக ஈஷா துவங்கியுள்ள பசுமைக்கரங்கள் திட்டத்தின் பணி மகத்தானது. மரங்களின் தேவையை மக்கள் மனதில் பதிய வைத்தல், மக்களை மரம் நடவும் வளர்க்கவும் ஊக்கப்படுத்துதல், மரங்களைப் பாதுகாத்தல், தமிழ்நாட்டின் பசுமைக் குடையை 10% அதிகரித்தல் என பல்வேறு செயல்பாடுகளில் இறங்கி அதில் வெற்றியும் கண்டுவருகிறது ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம். தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்க 12.5 கோடி மரங்களை தமிழ்நாட்டில் நட்டு வளர்ப்பது என ஒரு மகத்தான நோக்கத்திற்காக தம்மை அர்ப்பணித்திருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் இலக்கு…

சுற்றுச்சூழலைக் காப்பது என்பது மரங்களின் உதவியில்லாமல் நடவாது. இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால் மரங்கள் இல்லாமல் மனிதனால் ஜீவிக்க முடியாது. மரங்களின் வெளிமூச்சே மனிதனின் உள்மூச்சாகிறது. "நமது நுரையீரலில் பாதி மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது" என சத்குரு சொல்வதுண்டு.

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பல லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காகக் கொண்டு, செயலாற்றி வருகிறது ஈஷா பசுமைக்கரங்கள். 

உருவாக்கப்படும் வேளாண் காடுகள்

நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை, இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தைக் கைவிட நினைக்கும் விவசாயிகளுக்கு ஓர் அற்புத வாய்ப்பாக ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் வேளாண் காடுகளை உருவாக்கித் தருகின்றன. மரங்கள் நட்டு, வேளாண் காடுகள் அமைக்க விரும்புபவர்களுக்கு விலை மதிப்புள்ள தேக்கு, குமிழ், மகிழம், செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, வெண் தேக்கு, தான்றிக்காய், மஞ்சள்கடம்பை, மலைவேம்பு, பூவரசு, வாகை போன்ற வகைகளில் தரமான மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம், நீடித்த, நிலைத்த வருவாய் பெறுவதற்கு ஏதுவாகிறது.

சுற்றுச்சூழலுக்கான இந்தியாவின் உயரிய விருதான "இந்திரா காந்தி பர்யவரன் புரஸ்கார்" விருதையும், தமிழக அரசு வழங்கும் சுற்றுச்சூழல் விருதினையும் ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் பெற்றுள்ளது.

மேலும் தொடர்புக்கு: 80009 80009

[email protected]

தின தமிழ்

காடுகளை பாதுகாத்தல் கட்டுரை-Save Forest Essay in Tamil

Photo of dtradangfx

காடுகளை பாதுகாத்தல் கட்டுரை-Save Forest Essay in Tamil:- காடுகள் நாம் உயிர்வாழ்வதற்கு மிக முக்கிய காரணியாக திகழ்கிறது .நாம் வாழும் பூமியை சமநிலையில் வைப்பதில் காடுகள் மிகுந்த பங்கு வகிக்கின்றன.காடுகளை பாதுகாப்பதே இயற்கை நமக்கு கொடுத்துள்ள இந்த வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்ல வழிவகுக்கும்

trees on forest at daytime

இந்த மிக மிஞ்சிய அறிவியல் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக காடுகளின் அழிவு துரிதமான அளவில் வளர்ந்து வருகிறது .இதன் காரணமாக இயற்கை மிக ஆபத்தான இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

காடுகளை சார்ந்து வாழும் காட்டு மிருகங்கள் மிக ஆபத்தான நிலைக்கு செல்ல காடுகள் அழிப்பு ஒரு காரணமாகும். விலங்குகள் மற்றும் பறவைகளின் அழிவு மனிதர்களின் வாழ்வியல் சுழற்சியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.காடுகளில் இருந்து மனிதர்கள் வாழும் இடங்களுக்கு காட்டு மிருகங்கள் இடம் பெயர்ந்து நமக்கு ஆபத்தை விளைவிப்பதை நாம் தினம் செய்திகளில் பார்ப்பது தொடர்கிறது .

காடுகள் அவற்றின் பரப்பளவை நாளுக்கு நாள் இழந்து வருகிறது அவற்றை தடுக்க உலகிலுள்ள அணைந்து நாடுகளும் சட்டங்கள் இயற்றி வருகின்றன.

காடுகளின் சிறப்பை மாணவர்களுக்கு சிறுவயது முதலே பள்ளி பாடங்கள் மூலமாக கற்பித்தல். சமூக வலைத்தளங்கள் மூலமாக சிறந்த விளம்பரங்களை வெளியிடுதல் .காவலர்கள் கொண்டும் பொது அதிகாரிகளை கொண்டும் நமது காட்ட காப்பது நமது கடமையாகும்

Photo of dtradangfx

Subscribe to our mailing list to get the new updates!

Lorem ipsum dolor sit amet, consectetur.

எனது கதாநாயகனாகிய எனது தந்தை கட்டுரை - My Father My Hero Essay For Children in Tamil

ஒரு இன்ச் எத்தனை சென்டிமீட்டர் கன்வெர்ட்டர், related articles, துரித உணவுகள் நன்மை தீமைகள் – fast food advantages and disadvantages, 5g நன்மை தீமைகள் – 5g pros and cons, முயற்சி திருவினையாக்கும் கட்டுரை-essay on efforts, எனக்கு பிடித்த உணவு கட்டுரை-my favorite food essay in tamil-தோசை கட்டுரை.

  • எனக்கு பிடித்த உணவு கட்டுரை-My Favorite Food Essay in Tamil-தோசை கட்டுரை July 4, 2023

New Smart Tamil Logo with Stroke

  • Personalities
  • Natural Resources
  • Web Stories

></center></p><h2>இயற்கையை பாதுகாப்போம் | Save nature in Tamil</h2><p><center><img style=

இப்பூமியானது உயிர்பெற்று நிலைத்திருப்பதற்கான அடித்தளமான காரணம் இயற்கை (Iyarkai) என்று சொன்னால் மிகையில்லை.

ஏனெனில், உயிர் வாழத்தேவையான காற்று முதல் உணவு, உறையுள் உட்பட அனைத்தும் இவ்வியற்கையை சார்ந்தே காணப்படுகிறது.

அத்துடன், உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்து விடயங்களும் இயற்கைக்குள் அடங்குகின்றன.

இயற்கையை பாதுகாப்போம் (Save nature in Tamil) என்று நாம் எப்போதும் சிந்தித்து செயற்பட வேண்டும். அப்போது தான் இயற்கை வளங்களும் காப்பாற்றப்படும்: உலக சமநிலையும் பேணப்படும்.

இயற்கையின் சிறப்பு

இயற்கையின் சிறப்பினை பற்றி நோக்கின் இப்பூமியானது கடல், ஆறுகள், குளங்குட்டைகள், சிற்றோடைகள், நீர்வீழ்ச்சிகள் என ¾ % மான நீர்ப்பரப்பினையும் மலைகள், காடுகள், சோலைகள், வயல் வெளிகள் என ¼ % மான பகுதி தரைப் பிரதேசத்தினையும் கொண்டு அமையப்பெற்றது.

அத்துடன், விலங்கினங்கள், பறவையினங்கள், பூச்சிப் புழுக்கள் என உயிரினப் பல்வகைமையை தனக்குள் அடக்கியுள்ளது இவ்வியற்கை.

இவ்வனைத்தையும் ஒன்றினைத்தே நாம் “இயற்கை” என ஓர்பெயர்க் கொண்டு அழைக்கிறோம்.

சூரிய மண்டலத்தில் உயிர்கள் வாழக் கூடியு ஒரே கோள் பூமியாகும். இந்த பூமியில் எண்ணிலடங்காத இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

நாம் பயன்படுத்துகிற எந்த பொருளாக இருந்தாலும் அது இயற்கை வளம் மூலமாக தயாரிக்கப்பட்ட பொருளாகத் தான் இருக்கும். இயற்கை இல்லையென்றால் இவ்வுலகமே இருக்க முடியாது.

இத்தனை சிறப்பும் பெருமையும் வாய்ந்த இயற்கையினை பல்வேறு வழிகளில் மாசுபடுத்தியும் வளங்களை அழித்தும் தீங்குவிளைவித்துக் கொண்டிருக்கிறோம் நாம்.

இதையும் வாசியுங்கள்:

  • ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் வாழ தினமும் காலையில் செய்யவேண்டிய பழக்க வழக்கங்கள்

இயற்கை அழிவு ஏற்படுவதற்கான காரணங்கள்

Save nature in Tamil

பூமியில் சனத்தொகையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றமையால், இயற்கை பயன்பாடுகளும் அதிகரித்துச் செல்கின்றன.

இதனால், தனது தேவையை பூர்த்தி செய்வதற்காக மேற்கூறப்பட்ட சிறப்புக்கள் வாய்ந்த இயற்கையை சுயநலத்துடன் அழித்து வருகிறான் மனிதன்.

காடுகளை அழித்து கட்டிடங்களையும், மாடி வீடுகளையும், அடுக்கடுக்கான தொழிற்சாலைகளையும் உருவாக்குகிறான்.

இதனால் இயற்கையின் முதல் கருவான காடுகள் அழிந்து வளி, நீர் பற்றாக்குறை ஏற்படல், புவி வெப்பமடைதல் போன்ற சூழல் பிரச்சினைகள் உருவாகின்றன. அத்துடன், பிராணிகளும் பாதிக்கப்படுகின்றன.

மேலும், காடுகளை அழித்து அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளின் கழிவுகள் நீர் நிலைகளில் கலப்பதனால் இயற்கை (Iyarkai) அன்னையின் இன்னோர் குழந்தையான நீரும் அசுத்தமாவதோடு, வளியில் நச்சு வாயுக்கள் கலப்பதனால் வளி மாசடைவும் ஏற்படுகிறது.

இவ்வாறான முறைகளில் புவியில் இயற்கை மாசடைவு ஏற்படுகிறது.

இப்படியான மானிட செயற்பாடுகளால் எண்ணற்ற இயற்கை அனர்த்தங்கள் உருவாகின்றன. அதாவது, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, வறட்சி போன்றவாறான இன்னல்கள் ஏற்படுகின்றன. 

காடுகளை வரையறையின்றி அழிப்பதனால் மழைவீழ்ச்சி அற்றுப்போய் அதிகபடியான வெப்பம் நிலவுகிறது. இதுவே, வறட்சியை உருவாக்குகிறது.

இதையும் வாசிக்க: 

  • நில மாசுபாடு
  • காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்

கட்டிடங்களையும் குடியிருப்புகளையும் அமைப்பதற்கு பசுமையான காடுகளை அழித்து தரைப் பிரதேசங்களை பொருத்தமற்றவாறு தோன்றுவதாலும் முறையற்ற அகழ்வுகளாலும் மண்சரிவு அபாயம் ஏற்படுகிறது.

மேலும், கிருமிநாசினிகள், பூச்சிக் கொல்லிகள் போன்ற இரசாயணப் பயன்பாடுகள் காரணமாக நிலத்தின் இயற்கை வளத் தன்மை கெட்டு வளமற்றதாக மாறுகின்றது.

அத்துடன், பிளாஸ்திக், பொலித்தீன், இறப்பர் போன்றன மண்ணுடன் சேர்வதாலும் மண் தரமற்றுப்போகிறது.

முறையற்ற மனித ஏதுக்களால் இயற்கையானது மாசுபடுகின்றது என்றால் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இயற்கையை பாதுகாக்கும் முறைகள்

இயற்கையை பாதுகாப்பது என்பது ஒவ்வொரு தனிமனிதனினதும் தலையாய கடமையாகும் என்பதில் எவ்வித மறுப்புமில்லை.

இயற்கையை அதிகப்படியாக பயன்படுத்தும் மனிதனே அதனை பாதுகாக்கவும் வேண்டும்.

தற்போது இயற்கை வளமானது அழிவடைந்துக் கொண்டே வருவதனால், ஊர் விட்டு ஊர் சென்றும் நாடு விட்டு நாடு சென்றும் சுற்றுலாவாக இயற்கையை கண்டு கழிக்க நேரிடும் காலமாக மாறிவிட்டது.

இந்நிலை வருங்காலத்தினருக்கு வர அனுமதிக்கக் கூடாது.

எனவே, இயற்கையை தனிமனிதன் ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டும். இயற்கை பாதுகாப்பு சட்டங்களை இறுக்கமாக்க வேண்டும்.

பொருத்தமற்ற சட்டங்களை சீர் அமைத்து மக்களுக்கு பொருத்தமான விதிகளை கொண்டு வர வேண்டும்.

ஒரு மரத்தையாவது நட வேண்டும் என்ற உணர்வு தோன்றுமாயின் காடுகள் அழியாது பாதுக்காக்கப்படும். காடுகள் பாதுகாக்கப்பட்டாலே இயற்கையை முழுமையாக காக்கலாம்.

  • ம ரம் வளர்ப்போம்

ஏனென்றால், மரம் என்பது இயற்கையின் மூச்சு என்று கூறலாம். காரணம் நிலம் , நீர், காற்று ஆகிய பிரதான இயற்கை வளங்களை பாதுகாக்கும் சக்தி மரங்களுக்கே உள்ளது.  

அதனால் மரங்கள் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு காடுகள் அழிக்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். காடுகள் அழிக்கப்படுவதனாலேயே பூமியின் சமநிலை பாதிக்கப்பட்டு பல இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.

மேலும்,  இயற்கை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். இயற்கையின் முக்கியத்துவம் பற்றி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தேவைக்கு ஏற்ப வரையறுக்கப்பட்டவாறு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவே இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும் என்ற உள்ளுணர்வு ஒவ்வொருவர் உள்ளத்திலும் தோன்றினாலே பாதி அழிவைத் தடுக்கலாம்.

ஏனெனில், நம்மோடு மட்டும் இவை அழிந்து போகாமல் எமது எதிர்கால சந்ததியினருக்கும் தேவை, அவர்களும் இயற்கையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு செயற்படுவதே உத்தமமாகும்.

இதையும் வாசிப்போம்:

  • தமிழ் மொழியின் சிறப்பு
  • கணனியை கண்டுபிடித்தவர் யார்?

எனவே, இயற்கையை பாதுகாப்போம் (Save nature in Tamil), உலகத்தை பலமாக்குவோம்.

Ganeshan Karthik

Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. Also, I design professional websites for business, blog, portfolio, etc. Please visit for more details: Webthik.com

Related Posts

Natural Resource in Tamil

இயற்கை வளம் | Natural Resource in Tamil

Leave a comment cancel reply.

Your email address will not be published. Required fields are marked *

New Smart Tamil is a blog that contains general knowledge-related articles in the Tamil language. New Smart Tamil was founded in September 2018 by Ganeshan Karthik.

Get in Touch with Our Social Media

Quick links, explore topics, information.

  • Privacy Policy
  • Smart Tamil Trend

New Smart Tamil Copyright 2018 – 2024. All Rights Reserved. Design by Webthik

  • ஆசிரியர் பக்கம்
  • மாவட்ட வீடியோக்கள்
  • கோயம்புத்தூர்
  • திருச்சிராப்பள்ளி
  • திருவண்ணாமலை
  • தூத்துக்குடி
  • இன்றைய ராசி பலன்
  • வார ராசி பலன்கள்
  • வருட ராசி பலன்கள்
  • கோவில் செய்திகள்
  • சனி பெயர்ச்சி 2022
  • குரு பெயர்ச்சி
  • ராகு கேது பெயர்ச்சி
  • திரைப்படங்கள்
  • தொலைக்காட்சி
  • கிசு கிசு கார்னர்
  • திரைத் துளி
  • திரைவிமர்சனம்
  • ஆரோக்கியம்
  • சமையல் குறிப்புகள்
  • வீடு-தோட்டம்
  • அழகு..அழகு..
  • தாய்மை-குழந்தை நலன்
  • உலக நடப்புகள்
  • கார் நியூஸ்
  • பைக் நியூஸ்
  • கார் தகவல் களஞ்சியம்
  • தொழில்நுட்பம்
  • விளையாடுங்க
  • பிரஸ் ரிலீஸ்

பூமியை பாதுகாக்க நீங்க என்ன செஞ்சீங்க?

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பூமி தினம் இன்று இந்தியாவிலும் கடைபிடிக்கப்படுகிறது..

சென்னை : உலகம் முழுவதும் ஏப்ரல் 22ஆம் தேதி பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று பூமி தினத்தில் இளம் தலைமுறையினருக்கு புவியை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் வழிகளை நாம் கற்றுக் கொடுப்போம்.

ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு இதவே நியூட்டன் சொல்லும் 3வது விதி. இதில் இயற்கைக்கும் பாரபட்சம் இல்லை, நம்மை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் பூமியை நாம் பாதுகாக்கததன் விளைவாகவே சுனாமி, சென்னையையே மூழ்கடித்த வெள்ளம், 3 மாவட்டத்தை புரட்டிப்போட்ட வர்தா புயல், 142 வருடத்தில் இல்லாத வறட்சி என பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

எனவே, சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது.

உலக பூமி தினம்

உலக பூமி தினம்

இந்த ஆண்டு ‘சுற்றுச்சூழல் மற்றும் பருவகால நிலை பற்றிய கல்வியறிவு' என்ற கருத்துருவில் உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலும் பூமியின் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே பூமி தினமாகும். அமெரிக்க செனட் உறுப்பினர் கெலார்ட் நெல்சன் 1970ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி இந்த பூமி தினத்தை உருவாக்கினார். அன்று முதல் இது தொடர்ந்து அமெரிக்காவில் தவறாமல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தற்போது உலகெங்கும் இது பிரபலமாகியுள்ளது.

பூமியின் முதல் எதிரி

பூமியின் முதல் எதிரி

இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட மனிதனால் வாழமுடியாது. இதை இன்றைய குழந்தைகளிடம் எடுத்து செல்ல வேண்டும். பூமியின் முதல் எதிரி யார்? என்று கேட்டால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், அது மனிதன்தான்.

பெரிய தீமை

இயற்கைக்கு எதிரான எந்த ஒரு கண்டு பிடிப்புகளும் மனிதர்களுக்கு தற்காலிக தீர்வை மட்டுமே தரக் கூடியது. மாறாக நிரந்தர பெரிய தீமைகளை பூமிக்கு அவை ஏற்படுத்துகின்றன.

பிளாஸ்டிக் மற்றும் மக்காத குப்பைகளின் பயன்பாட்டுக்குத் தடை போட்டாலே பூமியை நாம் பாதுகாக்கலாம், ஆனால் நவீனமயம், சோம்பேறித் தனத்தின் காரணமாக பிளாஸ்டிக்கிற்கு நாம் அடிமையாகியுள்ளோம்.

புவியை பாதுகாப்போம்

புவியை பாதுகாப்போம்

பிளாஸ்டிக் அடிமைத்தனத்தை ஒழிப்பதோடு அடுத்த தலைமுறைக்கு இதை பயிற்றுவித்தால் மட்டுமே 9 கோள்களில் ஒன்றாக இருக்கும் பூமியில் வரும் காலத்தில் ஒரு ஆள் கூடாத வாழ முடியாத நிலையை மாற்ற முடியும்.

எண்ணூர் அமோனியா வாயுக்கசிவு விவகாரம்.. இழப்பீடு அளிக்க தொழிற்சாலைக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

environment சுற்றுச்சூழல்

ரஷ்யா - உக்ரைன் போரில் மோடியின் மாஸ்டர்மைண்ட்.. இரண்டு நாடுகளுடனும் நட்பு.. இதுதான் ராஜதந்திரம்!

ரஷ்யா - உக்ரைன் போரில் மோடியின் மாஸ்டர்மைண்ட்.. இரண்டு நாடுகளுடனும் நட்பு.. இதுதான் ராஜதந்திரம்!

தங்கம் விலையை பார்த்தவர்களுக்கு.. ஒரே ஷாக்.. சென்னை, திருச்சி, கோவையில் என்ன நடந்தது? விலை நிலவரம்?

தங்கம் விலையை பார்த்தவர்களுக்கு.. ஒரே ஷாக்.. சென்னை, திருச்சி, கோவையில் என்ன நடந்தது? விலை நிலவரம்?

 விஜய்க்கு எதிராக கடும் கோபத்தில் திமுக.. பின்னணியில் இப்படி ஒரு காரணம்

விஜய்க்கு எதிராக கடும் கோபத்தில் திமுக.. பின்னணியில் இப்படி ஒரு காரணம்

Latest updates.

70 வயசாயிருச்சு.. மூத்த குடிமகன், மாத்திரை சாப்பிடறேன்.. எடப்பாடி பழனிசாமி கோர்ட்டில் கேட்டது என்ன?

  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

our environment essay in tamil

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.

facebookview

Essay on Save Environment for Students and Children

500+ words essay on globalization.

Environment refers to the natural surroundings and conditions in which we live. Unfortunately, this Environment has come under serious threat. This threat is almost entirely due to human activities. These human activities have certainly caused serious damage to the Environment. Most noteworthy, this damage risks the survival of living things on Earth. Therefore, there is an urgent need to save the Environment.

Essay on Save Environment

Ways of Saving Environment

First of all, planting trees should be given massive attention. Above all, a tree is the source of oxygen. Unfortunately, due to construction, many trees have been cut down. This certainly reduces the amount of oxygen in the environment. Growing more trees means more oxygen. Hence, growing more trees would mean better life quality.

Similarly, people must give attention to forest conservation. Forests are vital for the Environment. However, deforestation certainly reduces the area of forests around the World. The government must launch programs to conserve the forests. The government must make harming forests a criminal offense.

Soil conservation is yet another important way to save the Environment. For this, there must be control of landslides, floods, and soil erosion . Furthermore, there should also be afforestation and tree plantation to conserve the soil. Also, terrace farming and using natural fertilizers are some more ways.

Waste management is a powerful way of protecting the environment. There must be proper disposal of wastes. Most noteworthy, this would help to keep the surroundings healthy. The government must ensure to clean the streets and other polluted land areas. Furthermore, there should be toilets in every house. Also, the government must provide enough public toilets.

Pollution is probably the biggest danger to the Environment. Smoke, dust, and harmful gases cause air pollution. These causes of air pollution come from industries and vehicles mostly. Furthermore, Chemicals and pesticides cause land and water pollution.

Get the huge list of more than 500 Essay Topics and Ideas

Benefits of Saving Environment

First of all, the world climate will remain normal. Harming the Environment and causing pollution have caused global warming. Due to this many humans and animals have died. Hence, saving the environment would reduce global warming .

The health of people would improve. Due to pollution and deforestation, the health of many people is poor. Conserving the Environment would certainly improve the health of people. Most noteworthy, saving Environment would reduce many diseases.

our environment essay in tamil

Saving Environment would certainly protect the animals. Extinction of many species will not take place due to saving Environment. Many endangered species would also increase in population.

The water level would rise. Damage to Environment has severely reduced the level of groundwater. Furthermore, there is a scarcity of clean drinking water around the World. Due to this, many people fell ill and die. Saving Environment would certainly avoid such problems.

In conclusion, Environment is a precious gift on this planet. Our Environment is facing a big danger. Saving Environment is the need of the hour. Probably, it is the biggest concern of Humanity right now. Any delay in this regard could be disastrous.

{ “@context”: “https://schema.org”, “@type”: “FAQPage”, “mainEntity”: [{ “@type”: “Question”, “name”: “Name any two ways for soil conservation?”, “acceptedAnswer”: { “@type”: “Answer”, “text”: “First of all, the ways for soil conservation are many. Two of them are afforestation and using natural fertilizers.” } }, { “@type”: “Question”, “name”: “How world climate would become normal because of saving the Environment?”, “acceptedAnswer”: { “@type”: “Answer”, “text”:”Saving Environment would certainly make the world climate normal. This is because there would a reduction of global warming.”} }] }

Customize your course in 30 seconds

Which class are you in.

tutor

  • Travelling Essay
  • Picnic Essay
  • Our Country Essay
  • My Parents Essay
  • Essay on Favourite Personality
  • Essay on Memorable Day of My Life
  • Essay on Knowledge is Power
  • Essay on Gurpurab
  • Essay on My Favourite Season
  • Essay on Types of Sports

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Download the App

Google Play

Art Of Living Logo

Search form

  • பயிற்சியைக் கண்டு பிடியுங்கள்
  • மையத்தைக் கண்டு பிடியுங்கள்

சுற்றுச் சூழல் பாதுகாப்பு (Environment protection in tamil)

our environment essay in tamil

Indigenous Specie Protection Restoring homes to indigenous fauna – Australia

our environment essay in tamil

Environmental Care

ஆன்மீகத்தை அடி வேராகக் கொண்ட, வாழும் கலை நிறுவனம், நமது பூமியினைப் பற்றி ஆயிரக் கணக்கான மக்களுக்கு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. பூமியானது பாறை, மணல், நீர் இவற்றினால் ஆனதாக இருந்தாலும் அதற்கு, நமது கவனம் மற்றும் கவனிப்புக்கு பதிலளிக்கும் வகையில் துடிப்பாக வாழும் அடையாளத்தை ஆன்மீகம் அளித்திருக்கின்றது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் தொலை நோக்கில் உந்தப் பட்டு, தன்னார்வத் தொண்டர்கள் குழுக்களாக உலகெங்கும் இருந்து, பல சுற்றுச் சூழல் திட்டங்களை முன்னிருத்தி யிருக்கின்றனர். அவை : பசுமை இயக்கம் மூலம் பெரிய அளவிலான மரம் நடுதல் , நீர் சேகரித்தல், மாசுபட்ட நதிகளைத் தூய்மைப் படுத்துதல் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும், செலவே இல்லாத வேதியல் பொருட்களற்ற, பொருளாதரத்தை மேம்படுத்தும் மற்றும் உயிர்பொருள் நிறைந்த வேளாண்மை, ஆகியவை ஆகும்.

மேலும் வாழும்கலை நிறுவனம் இயற்கையைப் பாதுகாப்பின் அவசியத்தைக் கண்டுணர்ந்து, வீட்டிலும் பள்ளியிலும் அப்பண்புகள் இளைஞர் மனங்களில் விதைக்கப் பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. "ஆழமான வேர்கள் அகலமான பார்வை" என்று அழைக்கப் படும் விழிப்புணர்வு திட்டங்கள் இந்த நீண்ட நாள் பணித்திட்டங்களின் முக்கியமான அங்கங்களாக விளங்குகின்றன.

Logo

Speech On Nature

நாம் அனைவரும் இயற்கையை ஏதோ ஒரு வகையில் நேசிக்கிறோம், இல்லையா? உதாரணமாக, சிலர் அதன் பசுமையான பசுமைக்காகவும், சிலர் அதன் மூச்சடைக்கக்கூடிய அழகுக்காகவும், சிலர் மூலிகைகள் போன்ற இயற்கை மனிதகுலத்திற்கு வழங்கிய பரிசுகளுக்காகவும் விரும்புகிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயற்கை நமக்கு பல விஷயங்களைத் தருகிறது, இதனால் நாம் ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ முடியும். எனவே இது நம் வாழ்வின் ஒரு அங்கமாகும். குறிப்பாக, மாணவர்கள் இயற்கை குறித்த உரைகளை நிகழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எளிதாகப் புரியும் வகையில் பின்வரும் உரைகள் மிகுந்த கவனத்துடன் எழுதப்பட்டுள்ளன.

Table of Contents

தமிழில் இயற்கை பற்றிய பேச்சு

இயற்கை பற்றிய பேச்சு – 1.

மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் மற்றும் எனது அன்பான மாணவர்களே – உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

காலை கூட்டம் முடியப்போகிறது. இப்பாடசாலையின் அதிபர் என்ற வகையில் எனது மாணவர்களுடன் ஊடாடும் அமர்வுகளை ஏற்பாடு செய்வது எனது பொறுப்பாகும். இதற்குக் காரணம், உங்களுடன் தொடர்பு கொள்ளவும், எங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று உங்கள் அனைவரிடமும் பேசுவதற்குக் காரணம், இயற்கையைப் பற்றி ஒரு உரை நிகழ்த்துவதும், நம் வாழ்வில் இயற்கையின் முக்கியப் பங்கை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும்தான். மனிதன் தன் நலனுக்காக இயற்கையை அழித்து தன் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்வதைக் கேள்விப்பட்டு சிலகாலமாக மனம் கலங்கினேன். இயற்கையை அழிப்பதற்குப் பதிலாக அல்லது பல்வேறு வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க – நாம் இயற்கையின் வளங்களையும் பரிசுகளையும் மட்டுமே சுரண்டுகிறோம். நாம் நம் இடத்தில் சரியாக இருக்கிறோமா? எதிர்காலத்தில் நம் தாய் பூமியைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்கப் போகும் அனைத்து குழந்தைகளிடமும் இந்தக் கேள்வியை எழுப்புவேன்.

நமது மனித வாழ்க்கை இந்த பூமியில் தொடங்கியது, அதன் பின்னர் நமது “தாய் பூமி” அழிவு மற்றும் துஷ்பிரயோகம் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது. மனிதர்களின் சுயநலம் காரணமாக, அழகான காடுகள் அழிக்கப்பட்டு, ஆறுகள் மாசுபடுத்தப்பட்டுள்ளன, பெரிய திறந்தவெளிகள் தொழிற்சாலைகள் அல்லது பிற கட்டிடக்கலை வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. விலங்குகளை வேட்டையாடுதல், மரங்களை வெட்டுதல், வளிமண்டலத்தில் நச்சு வாயுக்களை வெளியிடுதல், மாசுபடுத்தப்பட்ட ஆறுகள் போன்ற மனிதர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளில் பல நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நமது இருப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பூமி அன்னையின் கோபத்தை நாம் தூண்டுகிறோம் என்பது நமக்குத் தெரியாது. நமது பூமி உண்மையிலேயே அழிவுகரமான செயல்களை எதிர்கொள்கிறது, இதன் காரணமாக ஆறுகள் வறண்டு வருகின்றன, தாவரங்கள் இறக்கின்றன மற்றும் பாலூட்டிகளின் இனங்கள் அழிந்து வருகின்றன. இன்றைக்கு உலகம் எதிர்நோக்கும் இன்னொரு பெரிய பிரச்சனை, ‘புவி வெப்பமயமாதல்’. பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்ட உயர்வு மற்றும் விரைவான காலநிலை மாற்றம் போன்ற நமது சுற்றுச்சூழலில் இது ஆழமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே நாம் அனைவரும் நமது செயல்பாடுகளைக் கண்காணித்து இதுபோன்ற சூழ்நிலைகளைக் கட்டுக்குள் கொண்டுவர உதவ வேண்டும்.

இப்போது நம் செயல்பாடுகளை எப்படிக் கண்காணிப்பது என்ற கேள்வி எழுகிறது. இதற்காக நீங்கள் அதிகம் உழைக்க வேண்டியதில்லை. உதாரணமாக, நீர் ஒரு முக்கியமான இயற்கை வளம். எனவே நாம் ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க வேண்டும், பயன்பாட்டில் இல்லாதபோது குழாயை அணைக்க வேண்டும் அல்லது ஃப்ளஷ் அல்லது மழைநீரைப் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் இவை அனைத்தையும் செய்யாததால் அதிகப்படியான தண்ணீர் வீணாகிறது. இது தவிர, இந்த நடவடிக்கைகளால் நமது நீர்நிலைகள் மாசுபடுவதால், குப்பைகளை ஆறுகளிலோ, வாய்க்கால்களிலோ வீசக்கூடாது. ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாதீர்கள் மற்றும் எங்கள் தாவரங்களின் பாதுகாப்பைப் பொருத்தவரை வீட்டு வைத்தியம் அல்லது பிற சுற்றுச்சூழல் நட்பு வழிகளைப் பயன்படுத்த வேண்டாம். இது தவிர, உங்கள் அழுகிய பழங்கள், காய்கறிகள், மீதமுள்ள உணவுகளை குப்பைத் தொட்டியில் போடுங்கள். முட்டை ஓடுகளை தூக்கி எறிந்துவிட்டு, உங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு இயற்கை உரம் தயாரிக்க பயன்படுத்த வேண்டாம். உரம் தயாரிப்பதற்கு பயனுள்ள பொருட்களை மறுசுழற்சி செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் பெரிதும் உதவுகின்றன.

இதேபோல் உங்கள் ஆற்றல் நுகர்வு சேமிக்கவும். அறையில் யாரும் இல்லை என்றால், ஆற்றல் பொத்தானை அணைக்கவும். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது தனியார் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம். உண்மையில் நீங்கள் சைக்கிளை சிறிது தூரம் கூட பயன்படுத்தலாம் மற்றும் வாயுக்களின் தீங்கு விளைவிக்கும் வெளியீட்டிலிருந்து உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம். எனவே, இந்த எளிய பயனுள்ள நடவடிக்கைகள் மூலம், உங்கள் தாய் பூமியை இயற்கையிலிருந்து காப்பாற்ற உங்கள் மதிப்புமிக்க பங்களிப்பைச் செய்யலாம்.

முடிவில் நான் சொல்ல விரும்புவது, இந்தத் தகவலை உங்களிடமே வைத்துக் கொண்டு இந்தச் செய்தியைப் பரப்பாதீர்கள், இதன் மூலம் ஒவ்வொரு தனிமனிதனும் பொறுப்புள்ள குடிமகனாக மாறி தங்கள் பூமியைக் காப்பாற்ற உதவுங்கள்.

இயற்கை பற்றிய பேச்சு – 2

அனைவருக்கும் வணக்கம்! எங்கள் சங்கத்தின் சந்திப்பு அறைக்கு உங்களை மனதார வரவேற்கிறேன்.

எமது சமூகம் தொடர்பான பல்வேறு விடயங்களை கலந்துரையாடுவதற்கும் எமது சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த விடயங்களை மீளாய்வு செய்வதற்கும் வாராந்தம் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. நமது சமுதாயத்தின் ஒரு குழுவின் செயலாளர் என்ற முறையில் நமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான எனது பொறுப்பாகவும் இருக்கிறது. இருப்பினும், சமீப காலங்களில், என்னை நிலைகுலையச் செய்த சில சம்பவங்கள் குறித்து அறிந்தேன். ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதிலும், சீரான மற்றும் நிலையான வாழ்வை வழங்குவதிலும் இயற்கை முக்கிய பங்கு வகிக்கிறது என்ற உண்மையை வலியுறுத்திய போதிலும், துரதிர்ஷ்டவசமாக இயற்கையைப் பாதுகாப்பதற்கான காரணத்தை உணராதவர்களை நான் சந்தித்திருக்கிறேன்.

எனவே, இன்று உங்கள் அனைவரின் முன்னிலையில் இயற்கையைப் பற்றிய ஒரு உரையை நான் வழங்கப் போகிறேன், இதன் மூலம் அனைத்து முக்கியமான விஷயங்களையும் நாம் அறிந்து கொள்ள முடியும், மேலும் நம்மைச் சுற்றியுள்ள இடங்களை மட்டுமல்ல, முழு தாய் பூமியையும் வாழ்வதற்கு சாதகமான இடமாக மாற்ற முடியும். சுற்றுச்சூழல்தான் நம் வாழ்வின் ஊற்று என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இது மனித வாழ்க்கையை வழிநடத்துவது மட்டுமல்லாமல், வாழ்க்கைத் தரம், உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் மற்றும் அவற்றின் அனைத்து செயல்பாடுகளையும் தீர்மானிக்கிறது. நமது சமூக வாழ்க்கையின் தரம் நமது சுற்றுச்சூழலின் தரத்துடன் நேரடியாக தொடர்புடையது.

அறிவியலும் தொழில்நுட்பமும் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், உயிரினங்களாகிய நாம் நமது இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு நம் வாழ்விற்கு மாற்றியமைக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. மனித நாகரிகம் சுற்றுச்சூழலில் வேரூன்றியுள்ளது மற்றும் நமது செயல்கள் இந்த அமைப்பை நேரடியாக பாதிக்கின்றன. தொழில்நுட்ப முன்னேற்றத்தின் உதவியுடன், மனிதன் தனது சுற்றுச்சூழலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும், ஆனால் அதன் முறையற்ற பயன்பாடு சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு வழிவகுக்கிறது. இயற்கையின் சக்திகளைக் கட்டுப்படுத்துவதற்கான முறைசாரா தொழில்நுட்பத் தலையீடுகள், சுனாமி, வெள்ளம், வறட்சி, அனல் காற்று, காட்டுத் தீ போன்ற பல்வேறு வழிகளில் தங்கள் கோபத்தைக் காட்டியுள்ளன.

இயற்கைப் பேரிடர்களுக்கு மேலதிகமாக, நிலத்தடி நீர் குறைதல், புதிய குடிநீர் பற்றாக்குறை, காடுகள், மண் மற்றும் பவளப்பாறைகள் அழிந்து போவது, தாவரங்கள் அழிந்து போவது மற்றும் விலங்கினங்கள் அழிந்து போவது போன்ற சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதங்கள் மீள முடியாதவை. பல்வேறு உயிரினங்களின் அழிவு, மீன்பிடி தோல்வி, நீர் மற்றும் காற்று மாசுபாடு அதிகரிப்பு, புவி வெப்பமடைதல் காரணமாக வெப்பநிலை அதிகரிப்பு, ஓசோன் படலத்தில் ஓட்டை அதிகரிப்பு மற்றும் கடல்கள், ஆறுகள் மற்றும் நிலத்தடி வளங்களில் அழுக்கு மூலம் விஷம்.

இப்படி இயற்கை வளங்கள் தொடர்ந்து அழிந்து வருவதால், நம் உயிருக்குப் பெரும் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறோம், குடிநீரும், சுத்தமான காற்றும், பெட்ரோலியமும், இயற்கை எரிவாயுவும், பூமியின் மேல்மட்ட மண்ணும் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. நமது வருங்கால சந்ததியை பயன்பாட்டிற்கு விடப்போவதில்லை. எனவே, நமது சுற்றுச்சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து, சாத்தியமான ஆபத்துகளில் இருந்து, குறிப்பாக சுரண்டக்கூடிய மனித நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்க வேண்டிய நேரம் இது.

இறுதியில் இயற்கையை நேசி என்றுதான் சொல்ல விரும்புகிறேன். அதன் இருப்பின் முக்கியத்துவத்தையும், அது நமக்கு ஏராளமாகத் தரும் பொருட்களையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

இயற்கை பற்றிய பேச்சு – 3

மதிப்பிற்குரிய அதிபர், மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் மற்றும் எனது அன்பு நண்பர்களே,

இயற்கை தினம் எனப்படும் மிக முக்கியமான நாளைக் கொண்டாட இன்று இந்த சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று நாம் அனைவரும் நம்மைச் சுற்றி மரங்களை நடப் போகிறோம், ஆனால் அதற்கு முன் நான் இயற்கையைப் பற்றி பேச விரும்புகிறேன். நமது சரியான தட்பவெப்ப நிலை மற்றும் இதர இயற்பியல் பண்புகள் காரணமாக உயிரினங்கள் வாழ்வதற்கு பூமி சிறந்த இடம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நமது பூமி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தது, அந்த நேரத்தில் அது பல அழிவுகரமான மோதல்களையும் அழிவுகரமான வெடிப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு உயிரினமும் வாழ இயற்கை பலவற்றை வழங்கி வருகிறது. அது நம் இருப்புக்கு உணவு, தங்குமிடம், காற்று, தண்ணீர் மற்றும் பலவற்றை வழங்குகிறது.

பூமியின் இயற்கையும் காலநிலையும் உயிரினங்களின் இருப்புக்கு கடவுள் கொடுத்த வரம். பூமியில் உள்ள இயற்கையானது பல்வேறு தட்பவெப்ப நிலைகள், மலைகள், பீடபூமிகள், ஆறுகள், பெருங்கடல்கள், மரங்கள், தாவரங்கள் போன்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது. நாம் அனைவரும் பிறந்ததிலிருந்து இன்றுவரை அவற்றைப் பயன்படுத்துகிறோம். இயற்கையானது நாளுக்கு நாள் சுருங்கி நமது தேவைகள் அதிகரித்து வருகின்றன.

பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் இருப்பதற்கு இயற்கை மட்டுமே காரணம். இன்று பூமியின் நிலை சரியில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாம் அனைவரும் இயற்கையின் கூறுகளைப் பயன்படுத்துகிறோம், ஆனால் இயற்கையின் தேவைகளில் நாம் ஆர்வம் காட்டவில்லை. நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நாம் இயற்கையை நாளுக்கு நாள் அழித்து வருகிறோம். இன்று இயற்கையின் மோசமான நிலைக்குப் பல காரணங்கள் உள்ளன – எரிபொருள், CFL, மக்கள் தொகை அதிகரிப்பு, காடுகள் அழித்தல் போன்றவை. இது தவிர, பயன்பாட்டில் இல்லாவிட்டாலும், பல்புகள் போல் பெரும்பாலான மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பல தவறான விஷயங்கள் உள்ளன. மூட வேண்டாம் தண்ணீர் பயன்பாட்டில் இல்லாத போது குழாயை அணைக்க வேண்டாம். இந்தப் பிரச்சனைகளில் நம்மில் பலர் கவனக்குறைவான அணுகுமுறையைக் காட்டுவது மிகவும் வருந்தத்தக்கது. நமது வாழ்க்கை முறையாலும், இயற்கையின் மீதான சுயநலத்தாலும் முழு பூமியும் மாசுபடுகிறது. இயற்கையின் பல கூறுகளை நாம் பயன்படுத்தியுள்ளோம், அவற்றில் பல இன்று அழிந்துவிட்டன.

இன்று நமது கவனக்குறைவாலும் சுயநலத்தாலும் பூமியில் பல இடங்களில் இயற்கையின் கூறுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் தண்ணீர் இல்லாதது, சுத்தமான காற்று இல்லாமை போன்றவற்றுக்கு நமது சுயநலம் மட்டுமே காரணம். இயற்கையின் மீதான நமது சுயநலப் போக்கை நாம் மாற்றிக்கொள்ளாவிட்டால் அது நமது பூமியின் அழிவையே ஏற்படுத்தும். நம்மையும் நமது பூமியையும் அழிவிலிருந்து காப்பாற்ற ஒரே வழி, தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்துவதன் அவசியத்தை மாற்றி, இயற்கையைப் பாதுகாப்பதில் நமது கடமையைப் புரிந்துகொள்வதுதான்.

இன்று முதல் நம் தாய் இயற்கைக்கு உதவ எங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குவோம் என்று உறுதிமொழி எடுப்போம், அது விருப்பமானது அல்ல. இது நம் கடமை, ஏனென்றால் நாம் இயற்கையில் வாழ விரும்பினால், நாளை எதையும் தாமதப்படுத்தாமல் இன்றே செய்ய வேண்டும்.

இத்துடன் எனது உரையை முடித்துக் கொள்வதோடு, மரநடுகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுமாறு எமது மாண்புமிகு அதிபர் அம்மாவிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இயற்கை பற்றிய பேச்சு – 4

காலை வணக்கம் பெண்களே மற்றும் தாய்மார்களே!

இந்தப் பகுதியில் இந்த அற்புதமான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது, இது மிகவும் பாராட்டத்தக்கது மற்றும் இங்கு கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் வழங்கிய இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்த வேண்டிய மிக அழகான நாள், மேலும் மேலும் மேலும் மரங்களை நட்டு அவற்றை நம் எதிர்காலத்தில் பராமரிப்போம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். நாம் அனைவரும் இயற்கையில் வாழ்வதையும், இயற்கையில் இருந்து பெற்ற பொருட்களைப் பயன்படுத்துவதையும் அனுபவித்து வருகிறோம். காலையில் சூரிய உதயத்தின் அழகிய காட்சியையும் இரவில் அழகான நிலவையும் பார்க்கிறோம். இயற்கையை ரசித்து, வரும் தலைமுறைக்கு நீண்ட காலம் கிடைக்கச் செய்ய வேண்டுமானால், அதன் பாதுகாப்புக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். இயற்கையை பசுமையாக வைத்திருப்பதும், தீங்கு விளைவிக்காமல் தடுப்பதும் நமது கடமை. பழங்கள் போன்ற இயற்கையின் பொருட்களைக் கருத்தில் கொண்டால்,

வறட்சி, வெள்ளம், நிலச்சரிவு, பனிப்பாறைகள் உருகுதல் போன்ற பல இடங்களில் சுற்றுச்சூழல் சமநிலையின்மை போன்ற பிரச்சினைகளை பூமி எதிர்கொள்கிறது, முக்கியமாக நாம் இயற்கையை அதிகமாக பயன்படுத்துவதால். இந்த பிரச்சனைகளை உருவாக்கியவர் மனிதனும் அவனது தேவையற்ற தேவைகளும் தான். நாம் அனைவரும் நம் பிஸியான வாழ்க்கையில் பிஸியாக இருக்கிறோம், இயற்கையால் மட்டுமே நாம் இந்த உலகில் வாழ்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம். இயற்கையின் பொருட்களைப் பயன்படுத்த மறப்பதில்லை ஆனால் இயற்கையின் பாதுகாப்பிற்காக ஏதாவது செய்ய மறந்து விடுகிறோம். இயற்கையின்றி இவ்வுலகில் எதுவும் சாத்தியமில்லை, அதன் பாதுகாப்பிற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

இயற்கையை பாதுகாக்க பல விஷயங்கள் உள்ளன. குறைவான மழையினால் பல இடங்கள் வறட்சியை எதிர்கொள்கின்றன, இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க நாம் மழை நீர் சேகரிப்பு மற்றும் குறைந்த அளவிலான தண்ணீரைப் பயன்படுத்தலாம். எரிபொருள், HCL, CFL, தொழில்மயமாக்கல், அணைகள் கட்டுதல் போன்ற பல பிரச்சனைகள் பனிப்பாறைகள் உருகுதல், ஆக்ஸிஜன் பற்றாக்குறை (O2) மற்றும் காற்றில் அதிகரித்து வரும் கார்பன் டை ஆக்சைடு (CO2) போன்ற பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. மறுசுழற்சி மூலம் கார் பூலிங், எரிபொருளின் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு, மின்சாரத்தின் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு, என இந்தப் பிரச்சனைகளுக்கு பல தீர்வுகள் உள்ளன. சூழல் நட்பு கேஜெட்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்துதல். இந்த அனைத்து தீர்வுகளின் வலிமையின் பேரில், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சரியான நடவடிக்கைகளை எடுக்க முடியும். உலகெங்கிலும் உள்ள பல இடங்களில் இந்த தீர்வுகள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பயன்படுத்தப்படுகின்றன. நம் இருப்புக்கு நம் இயல்புதான் காரணம் என்பதாலும், இயற்கையின் அழிவுக்கு நாமே காரணமாகிவிடக் கூடாது என்பதாலும், இது நடந்தால் அது நம்மைப் பேரழிவிற்கு அழைத்துச் செல்லும் என்பதாலும் இதை நாமே செய்ய வேண்டும்.

இந்த சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு எல்லையற்ற தீர்வுகள் உள்ளன, இப்போது நாம் இயற்கையை அனுபவித்து வாழ வேண்டுமா அல்லது இந்த உலகில் இருந்து அழிந்து போக வேண்டுமா என்பது நம் கையில் உள்ளது.

இந்த நேரத்தில் எனது உரையை முடித்துக் கொள்வதுடன், இந்நாளை சிறப்பாக நடத்தி முடித்த எங்கள் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கும், உங்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது உங்கள் அனைவரையும் உரையாற்றுமாறு எனது மரியாதைக்குரிய மேலாளரைக் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் நல்ல நாள்.

Leave a Comment Cancel Reply

You must be logged in to post a comment.

© Copyright-2024 Allrights Reserved

Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

  • Add a Primary Menu

Tamil Essays தமிழ் கட்டுரைகள்

தமிழ் கட்டுரைகள்.

Tamil Essays | Tamil Powerpoint Presentations | Tamil Informations | Tamil Study Materials | Tamil Guides | Tamil Tutorials | Tamil Quiz

மாடி தோட்டம் கட்டுரை – Maadi Thottam Essay in Tamil மாடி தோட்டம் கட்டுரை - Maadi Thottam Essay in Tamil :- உணவே மருந்தாக உண்டு வந்த காலம் சென்று உணவே நஞ்சாக மாறிவிட்ட காலத்தில் ... Read More karakattam essay in tamil – கரகாட்டம் கட்டுரை karakattam essay in tamil - கரகாட்டம் கட்டுரை :- தமிழ்நாட்டின் மிக முக்கியமான மற்றும் பழமையான நடன வகைகளில் மிக முக்கியமானது இந்த கரகாட்டமாகும்.குறிப்பாக மழைக்கு ... Read More Fathers Day Wishes in Tamil – தந்தையர் தின நல் வாழ்த்துக்கள் Fathers Day Wishes in Tamil - தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்:- எப்போதும் நம்மை பற்றியே யோசித்து செயலாற்றும் நமது தந்தையர்களுக்கு ஜூன் 19ம் தேதி ... Read More En Thai Nattukku Oru Kaditham in Tamil – என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம் En Thai Nattukku Oru Kaditham in Tamil - என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம் :- நான் பிறந்த இந்த நாட்டிற்கு ஒரு நன்றி ... Read More தோழிக்கு கடிதம்-Tholiku Kaditham in Tamil தோழிக்கு கடிதம்-Tholiku Kaditham in Tamil :- தோழிக்கு கடிதம் எழுதும்போது முறைசாரா (Informal Letter) முறைப்படி எழுத வேண்டும் ,எழுதுபவர் பற்றிய அல்லது பெறுபவர் பற்றிய ... Read More Bank Statement Request Letter Tamil- பேங்க் ஸ்டேட்மெண்ட் விண்ணப்ப மாதிரி கடிதம் Bank Statement Request Letter Tamil- பேங்க் ஸ்டேட்மெண்ட் விண்ணப்ப மாதிரி கடிதம்  statement letter for bank:- உங்கள் வங்கி கணக்கிற்கு பேங்க் ஸ்டேட்மென்ட் (வங்கி ... Read More Television Advantages and Disadvantages Essay in Tamil- தொலைக்காட்சி நன்மை தீமைகள் Television Advantages and Disadvantages Essay in Tamil- தொலைக்காட்சி நன்மை தீமைகள் :- தொலைக்கதியின் பயன் நன்மையா தீமையா என்ற கேள்வி ஆண்டாண்டு காலமாக கேட்கப்படும் ... Read More Neerindri Amayathu Ulagu Katturai in tamil- நீரின்றி அமையாது உலகு கட்டுரை Neerindri Amayathu Ulagu Katturai in tamil- நீரின்றி அமையாது உலகு கட்டுரை :- நீர் என்றால் வாழ்கை ,இயற்க்கை நமக்கு கொடுத்திருக்கும் மிக பெரிய கொடை ... Read More சுற்றுப்புற தூய்மை கட்டுரை – Sutrupura Thuimai Katturai in Tamil சுற்றுப்புற தூய்மை கட்டுரை - Sutrupura Thuimai Katturai in Tamil:- மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்று தூய்மையான சுற்றுப்புறமே ஆகும் ,எவரொருவர் தான் வாழும் இடமான ... Read More welcome speech in Tamil essay welcome speech in Tamil essay வரவேற்பு பேச்சு கட்டுரை:-வரவேற்பு பேச்சு ஒவ்வொரு விழாவிலும் அதன் நடத்துனராக இருந்து விழாவை சிறப்பிக்கும் பேச்சாளரின் கடமையாகும் ,ஒவ்வொரு மேடை ... Read More Top 10 richest person in Tamilnadu 2021- தமிழகத்தின் பத்து செல்வந்தர்கள் Top 10 richest person in Tamilnadu 2021- தமிழகத்தின் பத்து செல்வந்தர்கள் :- இந்திய அரசாங்கத்தில் அதிகம் வருமானம் ஈட்டும் மாநிலமாக எப்போதும் இருக்கும் தமிழ்நாட்டில் ... Read More Iyarkai Valam Katturai in Tamil – இயற்க்கை வளம் கட்டுரை Iyarkai Valam Katturai in Tamil - இயற்க்கை வளம் கட்டுரை :- இயற்க்கை வளங்களை பொறுத்தே நமது வாழ்வாதாரம் அமைகிறது.இயற்க்கை அன்னையின் கொடையான இயற்க்கை வளங்களை ... Read More Computer in Tamil Essay – கணிப்பொறி – கணினி கட்டுரை Computer in Tamil Essay - கணிப்பொறி - கணினி கட்டுரை computer essay in Tamil:- இன்றைய நாகரிக உலகில் கணினி இன்றி எந்த ஒரு ... Read More corona kala kathanayakarkal tamil katturai – கோரோனோ கால கதாநாயகர்கள் கட்டுரை corona kala kathanayakarkal tamil katturai - கோரோனோ கால கதாநாயகர்கள் கட்டுரை :- கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2020 ம் ஆண்டு கோரோனோ ... Read More malai neer semipu katturai in tamil – மழைநீர் சேமிப்பு கட்டுரை malai neer semipu katturai in tamil - மழைநீர் சேமிப்பு கட்டுரை :- மழைநீர் சேமிப்பு மட்டுமே நன்னீரை சேமிப்பதில் சிறந்ததாகும்.மழைநீரை சேமிப்பதின் மூலமாக பல ... Read More Tamil Story For Kids tamil story for kids - These are the latest kids story in tamil, lots of parents want to tell story ... Read More Women’s Day Essay in Tamil – பெண்கள் தினம் கட்டுரை Women's Day Essay in Tamil - பெண்கள் தினம் கட்டுரை:- பெண்ணாக பிறந்ததற்கு பெருமிதம் கொள்ளும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் ,அனைத்து துறைகளும் சாதனை ... Read More Disaster Management essay in Tamil – பேரிடர் மேலாண்மை கட்டுரை Disaster Management essay in Tamil - பேரிடர் மேலாண்மை கட்டுரை :- அனைத்து தேசங்களும் எப்போதும் பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் ... Read More Ariviyal Katturai in Tamil – அறிவியல் கட்டுரை Ariviyal Katturai in Tamil - அறிவியல் கட்டுரை : பண்டைய காலங்களை ஒப்பிடும்போது அறிவியல் வளர்ச்சியில் நாம் எவ்வளவோ சாதனைகளை பார்த்து விட்டோம்.நாம் வாழும் தற்கால ... Read More Manithaneyam Essay in Tamil – மனிதநேயம் கட்டுரை – Humanity Tamil Essay Manithaneyam Essay in Tamil - மனிதநேயம் கட்டுரை - Humanity Tamil Essay :- மனிதனாக இருப்பதற்கு அடிப்படை தகுதியே மனிதநேயம் கொண்டிருப்பதே. மனிதனின் அடிப்படை ... Read More Nature Essay in Tamil – இயற்கை கட்டுரை Nature Essay in Tamil - இயற்கை கட்டுரை - நம்மை சுற்றியுள்ள அனைத்துமே இயற்கை என்ற வாக்கியம் உண்மையானதாகும்.நம்மை சுற்றியுள்ள வாயுமண்டலம், காலநிலை,மரங்கள்,மலர்கள்,வயல்கள் என அனைத்தும் ... Read More Silapathikaram Katturai in Tamil – சிலப்பதிகாரம் கட்டுரை Silapathikaram Katturai in Tamil - சிலப்பதிகாரம் கட்டுரை :- கதை கொண்டு காப்பியம் அமைத்தல் என்பது தமிழர்களுக்கு கைவந்த கலையாகும். தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ... Read More children’s day essay in Tamil – குழந்தைகள் தினம் கட்டுரை children's day essay in Tamil - குழந்தைகள் தினம் கட்டுரை:- முன்னாள் பிரதமரும் இந்திய சுதந்திர போராட்ட வீரருமான பண்டிதர் ஜவாஹர்லால் நேரு குழந்தைகள் மீது ... Read More மூலிகை இலைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களும் மூலிகை இலைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களும் இங்கு தொகுக்க பட்டு உங்களுக்கு கொடுக்க பட்டுள்ளன துளசியின் நன்மைகள் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது காய்ச்சலுக்கு அருமருந்தாக இருக்கிறது ... Read More நான் விரும்பும் தலைவர் கட்டுரை naan virumbum thalaivar katturai in tamil நான் விரும்பும் தலைவர் கட்டுரை naan virumbum thalaivar katturai in tamil :- நான் விரும்பும் தலைவர் என்ற கட்டுரைக்கு படிக்காத மேதை காமராஜரே பொருத்தமாக ... Read More உழைப்பே உயர்வு கட்டுரை – Hard Work Essay in Tamil (Ulaipe Uyarvu) உழைப்பே உயர்வு கட்டுரை - Hard Work Essay in Tamil :- கடின உழைப்பே உயவுக்கு சிறந்த வழியாகும் .உழைப்பில்லாமல் வெற்றி என்பது வெறும் கனவாகும்.நல்ல ... Read More Bharathiar Katturai in Tamil – பாரதியார் கட்டுரை Bharathiar Katturai in Tamil - பாரதியார் கட்டுரை :- தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கு திருக்குறளுக்கு அடுத்து சொல்லித்தரப்படுவது பாரதியார் பாடல்களே ஆகும் . பாரதியார் கவிஞர் ... Read More Velu Nachiyar Essay in Tamil – வீர மங்கை வேலுநாச்சியார் Velu Nachiyar Essay in Tamil - வீர மங்கை வேலுநாச்சியார் :- ஆங்கிலேயரை எதிர்த்து பதினேழாம் நூற்றாண்டிலேயே போர்தொடுத்தவர் வீரமங்கை வேலுநாச்சியார் ஆவர் .தமிழகத்தின் சிவகங்கையின் ... Read More Pongal essay in Tamil -Katturai- பொங்கல் பண்டிகை கட்டுரை Pongal essay in Tamil -Katturai- பொங்கல் பண்டிகை கட்டுரை :- பொங்கல் பண்டிகை தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் திருவிழா ஆகும் .this is a ... Read More Essay About Rain in Tamil – மழை கட்டுரை Essay About Rain in Tamil - மழை கட்டுரை :- புவியின் நன்னீர் சுழற்சிக்கு மழையே உறுதுணையாக ஒன்றாகும். அதிக மழை பெறுவதும் அதை சேமிப்பதும் ... Read More Thannambikkai Essay in Tamil – தன்னம்பிக்கை கட்டுரை Thannambikkai Essay in Tamil - தன்னம்பிக்கை கட்டுரை :- தன்னம்பிக்கை என்பது உங்களின் மீது உங்கள் திறமையின் மீது உங்கள் செயல் பாடுகளின் மீது நீங்கள் ... Read More Maram katturai in Tamil -மரம் கட்டுரை (essay about trees in Tamil) Maram katturai in Tamil -மரம் கட்டுரை (essay about trees in Tamil) :- மனிதனுக்கு தேவையான பிராணவாயு மற்றும் உணவு பொருட்களை தரும் மரங்களை ... Read More Global Warming Essay in Tamil : Boomi veppamayamathal katturai in Tamil Global Warming Essay in Tamil : Boomi veppamayamathal katturai in Tamil :- பூமி வெப்பமயமாதல் கட்டுரை புவி வெப்பமயமாதல் என்பது மிக முக்கிய ... Read More Tamilar Panpadu Katturai in Tamil – தமிழர் பண்பாடு கட்டுரை Tamilar Panpadu Katturai in Tamil :- எப்போதுமே இந்திய கலாச்சாரத்திற்கு உலகளவில் வியத்தகு வரவேற்பு உண்டு .குறிப்பாக கலாச்சாரங்களின் உச்சம் என இந்திய கலாச்சாரங்களின் தலைமையாக ... Read More My School Essay in Tamil Katturai – எனது பள்ளி கட்டுரை My School Essay in Tamil Katturai - எனது பள்ளி கட்டுரை :- எனது பெற்றோர்களுக்கு அடுத்த படியாக ஒழுக்கத்தையும் அறிவையும் புகட்டுவதில் அதிக பங்கு ... Read More kalvi katturai in tamil – கல்வி கட்டுரை kalvi katturai in tamil - கல்வி கட்டுரை :- கல்வியே ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையாகும் , கல்வியே அறியாமை மற்றும் மூடத்தனத்தை வேரறுக்கும் ஆயுதமாகும் ... Read More Desiya Orumaipadu Katturai in Tamil – தேசிய ஒருமைப்பாடு Desiya Orumaipadu Katturai in Tamil - தேசிய ஒருமைப்பாடு :- இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை என்ற பத்திர்ற்கு ஏற்ப பல்வேறு கலாச்சாரங்கள் ,பல்வேறு மதங்கள் ,பல்வேறு ... Read More Abdul Kalam Essay in Tamil (Katturai) அப்துல் கலாம் கட்டுரை ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் சுருக்கமாக ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்று அழைக்க படுகிறார் , அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 இல் பிறந்தார் ... Read More salai pathukappu katturai in tamil |road safety essay சாலை பாதுகாப்பு கட்டுரை salai pathukappu katturai in tamil |road safety essay :- சாலைப் பாதுகாப்பு என்பது பூமியிலுள்ள ஒவ்வொரு நபரும் வாகனங்களைப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ சரியான கவனம் ... Read More Tamil Katturai about Forest in Tamil language காடு Tamil Katturai about Forest in Tamil language காடு : காடு என்பது ஒரு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாகும், இது பன்முகத்தன்மை மற்றும் பன்முக மரங்கள் ... Read More Baking soda in Tamil – சமையல் சோடா அல்லது அப்பச்சோடா Baking soda in Tamil - சமையல் சோடா அல்லது அப்பச்சோடா பேக்கிங் சோடா, சோடியம் பைகார்பனேட் என்றும் அழைக்கப்படுகிறது, இதுசமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கார்பன் ... Read More Noolagam Katturai in Tamil – நூலகம் Noolagam Katturai in Tamil - நூலகம் :- சிறந்த கல்வி அறிவை பெறுவதற்கு நாம் நூலகத்தையே நாடுகிறோம். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நமக்கு நூலகம் மூலமாக எளிதாக ... Read More Pen Kalvi Katturai In Tamil – பெண் கல்வி கட்டுரை Pen Kalvi Katturai In Tamil - பெண் கல்வி : - தொட்டிலை காட்டும் பெண் கை உலகை ஆளும் சக்தி படைத்தது என்று சான்றோர் ... Read More Sutru Sulal Pathukappu Katturai In Tamil | சுற்று சூழல் பாதுகாப்பு Sutru Sulal Pathukappu Katturai In Tamil :- சுற்று சூழலே தூய்மையே நாம் உயிர் வாழ்வதற்கும் நமது உலகை பாதுகாப்பதர்கும் அடிப்படை ஆகும் ,அத்தகைய சுற்று ... Read More Indian Culture Tamil Essay – இந்திய கலாச்சாரம் கட்டுரை Indian Culture Tamil Essay - India Kalacharam Katturai - இந்திய கலாச்சாரம் கட்டுரை இந்திய கலாச்சாரமானது பல்வேறு கலாச்சாரங்களின் தொகுப்பாகும் , வேற்றுமையில் ஒற்றுமை ... Read More Kalviyin Sirappu Tamil Katturai – கல்வியின் சிறப்பு கல்வி என்பது மனித வாழ்வின் முக்கியமான ஒன்று என்பது நமக்கு தெரியும் , எனவேதான் கல்வி கண்போன்றது என்று சொல்ல படுகிறது , கல்வி பயின்ற மனிதனை ... Read More Tamil essay writing competition topics | Tamil Katturaigal | Katturai in Tamil Topics Here is the full list of Essay Writing Competition Topics 2021 தமிழ் பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளுக்கான தலைப்புகள் இங்கே கொடுக்க ... Read More Top 10 Freedom Fighters In Tamilnadu| சுதந்திர போராட்ட வீரர்கள் top10 Tamilnadu freedom fighters : இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்த்த முக்கிய தலைவர்களை பற்றி நாம் இப்போது பார்க்கலாம் சுதந்திர போராட்டத்தில் ... Read More ஸ்ரீநிவாச இராமானுஜர் காஸ், கும்மர் மற்றும் மிகைப்பெருக்கத் தொடர்களுக்கான விளைவுகளை தனி ஒரு ஆளாக இருந்து கண்டுபிடித்தவர், ஸ்ரீநிவாச இராமானுஜன். மிகைப்பெருக்கத் தொடரின் பகுதி தொகைகளையும், பொருட்களையும் ஆய்வு செய்வதில் ... Read More கல்பனா சாவ்லா விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு ... Read More டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், ... Read More சுவாமி விவேகானந்தர் Vivekanandar Essay in tamil | Vivekanandar Powerpoint சுவாமி விவேகானந்தர் சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக ... Read More தாதா சாகேப் பால்கே தாதா சாகேப் பால்கே அவர்கள், ‘இந்திய சினிமாவின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர். 19 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து, முழு நீளப் படங்களான ‘ராஜா ஹரிச்சந்திரன்’, ‘மோகினி பஸ்மாசுர்’, ... Read More விசுவநாதன் ஆனந்த் Viswanathan Anand the grandmaster  from india |former world chess champion | Essay in tamil font‘இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்’ எனப் புகழப்படும் ... Read More திப்பு சுல்தான் மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், திப்பு சுல்தான். தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் ... Read More தி. வே. சுந்தரம் ஐயங்கார் தி. வே. சுந்தரம் ஐயங்கார் அவர்கள், உண்மையான தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகள் கொண்ட மனிதராவார். 1930களில், வாகனங்களில் செல்வதே ஒரு தூரத்துக் கனவாகப் பல இந்தியர்களுக்கு ... Read More சோனியா காந்தி இத்தாலியில் பிறந்து, இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியாக இருந்த இந்திராகாந்தியின் மருமகளாகவும், ராஜீவ் காந்தியின் மனைவியாகவும் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தவர், சோனியா காந்தி அவர்கள் ... Read More அடல் பிஹாரி வாஜ்பாய் – Atal Bihari Vajpayee Essay அடல் பிஹாரி வாஜ்பாய் - Atal Bihari Vajpayee Essay :-அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரி ஆவார். நான்கு ... Read More என்.ஆர். நாராயண மூர்த்தி என். ஆர். நாராயண மூர்த்தி கர்நாடகாவை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர் ஆவார். இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியவர். தொழில் நுட்பத்துறையில் மட்டுமல்லாமல், இன்ஃபோசிஸ் ... Read More ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல ... Read More ராஜா ராம் மோகன் ராய் ‘ராஜா ராம் மோகன் ராய்’ என்றும், ‘ராம் மோகன் ராய்’ என்றும் போற்றப்படும், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று அழைக்கப்பட்டார் ... Read More சந்திரசேகர ஆசாத் சந்திரசேகர ஆசாத் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தன்னுடைய மாணவப் பருவத்திலிருந்தே பாரத நாட்டின் மீது தீவிர பற்றுடையவராகவும், சோசலிச முறையில் இந்தியா விடுதலை ... Read More சத்ரபதி சிவாஜி மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள். இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர்வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற ... Read More எம். விஸ்வேஸ்வரய்யா கிருஷ்ணராஜ சாகர் அணையின் சிற்பி’ என கருதப்படும் எம். விஸ்வேஸ்வரய்யா ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர் ஆவார். இவர் எடுத்துக்கொண்ட காரியத்தில் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற ... Read More Kodikatha Kumaran Essay In Tamil கொடி காத்த குமரன் என எல்லோராலும் போற்றப்படும் திருப்பூர் குமரன் விடுதலை போராட்ட களத்தில் தன்  இன்னுயிரை தந்து இந்திய தேசிய கொடியை  மண்ணில் விழாமல் காத்து ... Read More ராஜா ரவி வர்மா ராஜா ரவி வர்மா அவர்கள், இந்திய கலை வரலாற்றில் மிகப் பெரிய ஓவியர்களுள் ஒருவராக கருதப்படுபவர். தமிழில் மிகப்பெரும் காவியங்களாகத் திகழும் மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளைத் ... Read More ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் விவேகானந்தருக்கு அடுத்த படியாக இந்திய இளைஞர்களின் மீது அதீத நம்பிக்கை வைத்த ஒரு தலை சிறந்த தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ஆவார் .இந்திய ... Read More பாரதிதாசன் “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த ... Read More எஸ். சத்தியமூர்த்தி எஸ். சத்திய மூர்த்தி அவர்கள், ஒரு தேசபக்தர் மற்றும் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட விடுதலை வீரரும் ஆவார். சிறந்த வழக்கறிஞராக விளங்கிய எஸ். சத்தியமூர்த்தி அவர்கள், தமிழக ... Read More ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல ... Read More ராஜா ராம் மோகன் ராய் ‘ராஜா ராம் மோகன் ராய்’ என்றும், ‘ராம் மோகன் ராய்’ என்றும் போற்றப்படும், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று அழைக்கப்பட்டார் ... Read More ராணி லக்ஷ்மி பாய் ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் ... Read More கம்பர் “கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் ... Read More திருபாய் அம்பானி ‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பங்கு சந்தைகளின் ‘முடிசூடா மன்னனாக’ விளங்கிய, ‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ அவர்களின் வாழ்க்கை வரலாறு ... Read More வ.உ.சிதம்பரனார் கட்டுரை VO Chidambaram in Tamil Essay வ.உ.சிதம்பரனார் கட்டுரை VO Chidambaram in Tamil Essay :- ‘வ. உ. சி’ என்று அழைக்கபடும் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், ஆங்கிலேயே அரசுக்கு ... Read More ரவீந்திரநாத் தாகூர் Rabindranath Tagore Biography in Tamil ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அவர் ஒரு கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர், மற்றும் ஒரு கல்வியாளரும் கூட.1913ல், அவரது கவிதைத் தொகுப்பான ... Read More சரோஜினி நாயுடு Sarojini Naidu biography in Tamil சரோஜினி நாயுடு Sarojini Naidu biography in Tamil:- சரோஜினி நாயுடு இந்தியாவின் புகழ் பெற்ற கவிஞர் , பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும்  சிறந்த ... Read More எம். எஸ். சுப்புலக்ஷ்மி – ms subbulakshmi biography in tamil எம். எஸ். சுப்புலக்ஷ்மி - ms subbulakshmi biography in tamil :- "இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் ... Read More Jawaharlal Nehru Essay In Tamil ஜவாஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு கட்டுரை Jawaharlal Nehru Essay In Tamil ஜவாஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன் கருதி ... Read More Sarvapalli Radhakrishnan Essay in Tamil Font சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கட்டுரை Sarvapalli Radhakrishnan Essay சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வாழ்கை வரலாறு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல்  குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார், ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் ... Read More Kamarajar Essay In Tamil |காமராஜர் வாழ்க்கை வரலாறு கட்டுரை Kamarajar Essay In Tamil :- This is a full biography of Kamrajar, This is an essay prepared by the Tamil ... Read More Sardar Vallabai Patel Tamil Essay | Tamil Katturai in Tamil Font Sardar vallabai Patel essay in tamil for kids and children, Sardar vallabai patel essay in english in another page please ... Read More Subramaniya Siva சுப்பிரமணிய சிவா வாழ்கை வரலாறு கட்டுரை சுப்பிரமணிய சிவா வாழ்கை வரலாறு கட்டுரை Subramaniya Siva Subramaniya Siva - சுப்பிரமணிய சிவா சுப்ரமணிய சிவா இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழக மக்களுக்கு தனக்கு ... Read More

சாம்சங் எம் 31

இரண்டுநாள் பேட்டரி பவருடன் கூடிய , மிக துல்லியமான காட்சிகள் வழங்கும் திரை,துல்லிய இசை,சூடாகாத பேட்டரி என அணைத்தது அம்சங்களும் நிறைந்த இந்த போன் தற்போது சலுகை விலையில்

Talk to our experts

1800-120-456-456

  • Environment Essay

ffImage

Essay on Understanding and Nurturing Our Environment

The environment is everything that surrounds us – the air we breathe, the water we drink, the soil beneath our feet, and the diverse flora and fauna that inhabit our planet. It's not just a backdrop to our lives; it's the very essence of our existence. In this essay, we'll explore the importance of our environment, the challenges it faces, and what we can do to ensure a sustainable and thriving world for generations to come.

Our environment is a complex and interconnected web of life. Every living organism, from the tiniest microbe to the largest mammal, plays a crucial role in maintaining the balance of ecosystems. This delicate balance ensures the survival of species, including humans. For instance, bees pollinate plants, which produce the oxygen we breathe. Nature is a masterpiece that has evolved over millions of years, and we are just one small part of this intricate tapestry.

Importance of Environment  

The environment is crucial for keeping living things healthy.

It helps balance ecosystems.

The environment provides everything necessary for humans, like food, shelter, and air.

It's also a source of natural beauty that is essential for our physical and mental health.

The Threats to Our Environment:

Unfortunately, our actions have disrupted this delicate balance. The rapid industrialization, deforestation, pollution, and over-exploitation of natural resources have led to severe environmental degradation. Climate change, driven by the increase in greenhouse gas emissions, is altering weather patterns, causing extreme events like floods, droughts, and storms. The loss of biodiversity is another alarming concern – species are disappearing at an unprecedented rate due to habitat destruction and pollution.

Impact of Human Activities on the Environment

Human activities like pollution, deforestation, and waste disposal are causing environmental problems like acid rain, climate change, and global warming. The environment has living (biotic) and non-living (abiotic) components. Biotic components include plants, animals, and microorganisms, while abiotic components include things like temperature, light, and soil.

In the living environment, there are producers (like plants), consumers (like animals), and decomposers (like bacteria). Producers use sunlight to make energy, forming the base of the food web. Consumers get their energy by eating other organisms, creating a chain of energy transfer. Decomposers break down waste and dead organisms, recycling nutrients in the soil.

The non-living environment includes climatic factors (like rain and temperature) and edaphic factors (like soil and minerals). Climatic factors affect the water cycle, while edaphic factors provide nutrients and a place for organisms to grow.

The environment includes everything from the air we breathe to the ecosystems we live in. It's crucial to keep it clean for a healthy life. All components of the environment are affected by its condition, so a clean environment is essential for a healthy ecosystem.

Sustainable Practices:

Adopting sustainable practices is a key step towards mitigating environmental degradation. This includes reducing our carbon footprint by using renewable energy, practicing responsible consumption, and minimizing waste. Conservation of natural resources, such as water and forests, is essential. Supporting local and global initiatives that aim to protect the environment, like reforestation projects and wildlife conservation efforts, can make a significant impact.

Education and Awareness:

Creating a sustainable future requires a collective effort, and education is a powerful tool in this regard. Raising awareness about environmental issues, the consequences of our actions, and the importance of conservation is crucial. Education empowers individuals to make informed choices and encourages sustainable practices at both personal and community levels.

Why is a Clean Environment Necessary?

To have a happy and thriving community and country, we really need a clean and safe environment. It's like the basic necessity for life on Earth. Let me break down why having a clean environment is so crucial.

First off, any living thing—whether it's plants, animals, or people—can't survive in a dirty environment. We all need a good and healthy place to live. When things get polluted, it messes up the balance of nature and can even cause diseases. If we keep using up our natural resources too quickly, life on Earth becomes a real struggle.

So, what's causing all this environmental trouble? Well, one big reason is that there are just so many people around, and we're using up a lot of stuff like land, food, water, air, and even fossil fuels and minerals. Cutting down a bunch of trees (we call it deforestation) is also a big problem because it messes up the whole ecosystem.

Then there's pollution—air, water, and soil pollution. It's like throwing a wrench into the gears of nature, making everything go wonky. And you've probably heard about things like the ozone layer getting thinner, global warming, weird weather, and glaciers melting. These are all signs that our environment is in trouble.

But don't worry, we can do things to make it better:

Plant more trees—they're like nature's superheroes, helping balance everything out.

Follow the 3 R's: Reuse stuff, reduce waste, and recycle. It's like giving our planet a high-five.

Ditch the plastic bags—they're not great for our landscapes.

Think about how many people there are and try to slow down the population growth.

By doing these things, we're basically giving our planet a little TLC (tender loving care), and that's how we can keep our environment clean and healthy for everyone.

Policy and Regulation:

Governments and institutions play a vital role in shaping environmental policies and regulations. Strong and enforceable laws are essential to curb activities that harm the environment. This includes regulations on emissions, waste disposal, and protection of natural habitats. International cooperation is also crucial to address global environmental challenges, as issues like climate change know no borders.

The Role of Technology:

Technology can be a double-edged sword in environmental conservation. While some technological advancements contribute to environmental degradation, others offer solutions. Innovative technologies in renewable energy, waste management, and sustainable agriculture can significantly reduce our impact on the environment. Embracing and investing in eco-friendly technologies is a step towards a greener and more sustainable future.

Conclusion:

Our environment is not just a collection of trees, rivers, and animals; it's the foundation of our existence. Understanding the interconnectedness of all living things and recognizing our responsibility as stewards of the Earth is essential. By adopting sustainable practices, fostering education and awareness, implementing effective policies, and embracing eco-friendly technologies, we can work towards healing our planet. The choices we make today will determine the world we leave for future generations – a world that can either flourish in its natural beauty or struggle under the weight of environmental degradation. It's our collective responsibility to ensure that it's the former.

arrow-right

FAQs on Environment Essay

1. What is the Environment?

The environment constitutes the entire ecosystem that includes plants, animals and microorganisms, sunlight, air, rain, temperature, humidity, and other climatic factors. It is basically the surroundings where we live. The environment regulates the life of all living beings on Earth.

2. What are the Three Kinds of Environments?

Biotic Environment: It includes all biotic factors or living forms like plants, animals, and microorganisms.

Abiotic Environment: It includes non-living factors like temperature, light, rainfall, soil, minerals, etc. It comprises the atmosphere, lithosphere, and hydrosphere.

Built Environment: It includes buildings, streets, houses, industries, etc. 

3. What are the Major Factors that Lead to the Degradation of the Environment?

The factors that lead to the degradation of the environment are:

The rapid increase in the population.

Growth of industrialization and urbanization.

Deforestation is making the soil infertile (soil that provides nutrients and home to millions of organisms).

Over-consumption of natural resources.

Ozone depletion, global warming, and the greenhouse effect.

4. How do we Save Our Environment?

We must save our environment by maintaining a balanced and healthy ecosystem. We should plant more trees. We should reduce our consumption and reuse and recycle stuff. We should check on the increase in population. We should scarcely use our natural and precious resources. Industries and factories should take precautionary measures before dumping their wastes into the water bodies.

5. How can we protect Mother Earth?

Ways to save Mother Earth include planting more and more trees, using renewable sources of energy, reducing the wastage of water, saving electricity, reducing the use of plastic, conservation of non-renewable resources, conserving the different flora and faunas, taking steps to reduce pollution, etc.

6. What are some ways that humans impact their environment?

Humans have influenced the physical environment in many ways like overpopulation, pollution, burning fossil fuels, and deforestation. Changes like these have generated climate change, soil erosion, poor air quality, and undrinkable water. These negative impacts can affect human behavior and can prompt mass migrations or battles over clean water.  

7. Why is the environment of social importance?

Human beings are social animals by nature. They spend a good amount of time in social environments. Their responsibility towards the environment is certainly important because these social environments might support human beings in both personal development goals as well as career development goals.

IMAGES

  1. Save Earth Essay In Tamil

    our environment essay in tamil

  2. Save Earth Essay In Tamil

    our environment essay in tamil

  3. Nature Essay In Tamil

    our environment essay in tamil

  4. Essay on Environment

    our environment essay in tamil

  5. Come, Let Us Save the Environment (Tamil)

    our environment essay in tamil

  6. Save Earth Essay In Tamil

    our environment essay in tamil

COMMENTS

  1. சுற்றுச்சூழல் பாதுகாப்பு

    சுற்றுச் சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றுச் சூழலை ...

  2. சுற்றுச் சூழலியலை காக்க 20 வழிகள்...! #WhereIsMyGreenWorld

    ஆசியாவிலேயே மிகப் பெரிய சமவெளிப் பகுதி தமிழகத்தின் டெல்டா ...

  3. Nature Essay in Tamil

    Previous Post 10th tamil padivam - படிவம் நிரப்புதல் Next Post Manithaneyam Essay in Tamil - மனிதநேயம் கட்டுரை - Humanity Tamil Essay

  4. உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day in Tamil)

    ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day in Tamil) ஒவ்வொரு ஆண்டும் ...

  5. பூமியை பாதுகாக்கும் பொறுப்பு மாணவர்களுக்கு உண்டு: இயற்கை வி்ஞ்ஞானி

    Scientist Nammazhvar said that students should try to save the earth. Already people are suffering because of global warming. Man leads a life away from nature which is not at all good, he told.

  6. පරිසරය සුරකිමු රචනාව 2024

    In this video essay, you will learn a save environment essay ( protect our environment) in English, Sinhalese and Tamil languages. This is a 10 lines on how ...

  7. உலக சுற்றுச்சூழல் நாள்

    Our cosmic oasis, cosmic blue pearl the most beautiful planet in the universe all the continents and the oceans of the world united we stand as flora and fauna புடவியின் பேரழகுக் கோளே! அண்ட ஓடையில் ஒளிர்நீல முத்தே!

  8. இயற்கை பற்றிய கட்டுரை

    Essay on Nature By / June 1, 2023 இயற்கை என்பது நாம் வாழும் கிரகத்தின் துடிப்பு.

  9. காடுகளை பாதுகாத்தல் கட்டுரை-Save Forest Essay in Tamil

    காடுகளை பாதுகாத்தல் கட்டுரை-Save Forest Essay in Tamil:- காடுகள் நாம் ...

  10. இயற்கையை பாதுகாப்போம்

    New Smart Tamil is a blog that contains general knowledge-related articles in the Tamil language. New Smart Tamil was founded in September 2018 by Ganeshan Karthik. Get in Touch with Our Social Media

  11. பூமியை பாதுகாக்க நீங்க என்ன செஞ்சீங்க?

    worldwide today earth day is celebrating to save earth -How to save earth from environmental changes and what you done to save it? English; ... Subscribe to Oneindia Tamil. சென்னை : உலகம் முழுவதும் ஏப்ரல் 22ஆம் தேதி பூமி தினம் ...

  12. இயற்கையின் 10 வரிகள்

    இயற்கையின் 10 வரிகள் - 10 Lines on Nature - WriteATopic.com. இயற்கையின் 10 கோடுகள்: மரங்கள், செடிகள், விலங்குகள், பூக்களின் நறுமணம், பழங்களின் இனிப்பு ...

  13. Essay on Environment for Students and Children

    500+ Words Essay on Environment. Essay on Environment - All living things that live on this earth comes under the environment. Whether they live on land or water they are part of the environment. The environment also includes air, water, sunlight, plants, animals, etc. Moreover, the earth is considered the only planet in the universe that ...

  14. இயற்கை

    European Wildlife is a Pan-European non-profit organization dedicated to nature preservation and environmental protection (eurowildlife.org) Nature Journal (nature.com) The National Geographic Society (nationalgeographic.com)

  15. Essay on Save Environment for Students and Children

    500+ Words Essay on Globalization. Environment refers to the natural surroundings and conditions in which we live. Unfortunately, this Environment has come under serious threat. This threat is almost entirely due to human activities. These human activities have certainly caused serious damage to the Environment.

  16. NCERT

    In this video i have explained Class 7 Our Environment Lesson 1 in tamil with pictures. Book back exercises video link:https://youtu.be/D6-QlPsl90s

  17. Environment protection in tamil

    சுற்றுச் சூழல் பாதுகாப்பு (Environment protection in tamil) Indigenous Specie Protection Restoring homes to indigenous fauna - Australia Environmental Care

  18. இயற்கை பற்றிய பேச்சு

    தமிழில் இயற்கை பற்றிய பேச்சு இயற்கை பற்றிய பேச்சு - 1 ...

  19. How to keep our environment clean essay in tamil

    We all must take an adhoc cleaning surfaces should be cleaned before disinfecting the environment. To do anything. Tamil. Essay in english for better rendering. Thanks for the implications of society. With the world for the current generation. Essay and the major issue which the implications of helping us achieve our mission. Tamil on ...

  20. இயற்கைவழி வேளாண்மை

    நமது பண்டையகால வேளாண்மை இல்க்கியங்களாலும், வரலாறுகளாலும் ...

  21. தமிழ் கட்டுரைகள்|Tamil Katturaigal

    தமிழ் கட்டுரைகள்| Tamil Essays in tamil fonts | Tamil Katturaigal | Tamil Articles | HSC Study Materials | Matric Study Materials | SSLC | TRP |TNPSC

  22. Environment Essay for Students in English

    The environment is everything that surrounds us - the air we breathe, the water we drink, the soil beneath our feet, and the diverse flora and fauna that inhabit our planet. It's not just a backdrop to our lives; it's the very essence of our existence. In this essay, we'll explore the importance of our environment, the challenges it faces ...

  23. How to keep environment cleanliness? essay in Tamil

    Answer. Keep Your Surroundings Clean Essay in Keeping our Surroundings Clean Controlling the use of plastic bags will also help to keep our surroundings clean.to keep the external body and environment Tamil people also keep their homes clean in of a clean hydrophilic metal surface. Cleanliness.Free Essays on Essay In Tamil On The Topic Clean ...